திங்கள், 19 டிசம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 21 எழுத்தாளர் .DR.தி.ஞானசேகரன்.


லையக மண்ணில் இதுவரை வெளிவந்த நாவல்களுக்கெல்லாம் சிகரமா திகழ்வது 'குருதி மலை' என்ற நாவலாகும். இந்த நாவல் ஒரு இலக்கிய பிரதி மட்டுமல்லாது ஒரு காலகட்ட வரலாற்று ஆவணமாகவும் விளங்குகின்றது. இலங்கை அரசின் தேசிய சாஹித்திய மண்டல விருதினை பெற்றிருக்கும்; இந்த நாவல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஆயு பட்டப்படிப்புக்கு பாடநூலாகவும் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய சிறப்புக்கள் பல பெற்ற நாவலினை தமிழ் உலகுக்கு தந்த பெருமைக்குரியவர்தான் எழுத்தாளர் DR.தி.ஞானசேகரன் அவர்கள்.




கடந்த 4 தசாப்தகாலத்துக்கும் மேலாக இலக்கிய பணியில் ஈடுபட்டு ஈழத்து இலக்கிய பரப்பில் தனது வேரினை ஆழப்பதித்திருக்கும் எழுத்தாளர் ஞானசேகரனை ஈழத்தின் பிரபல இலக்கிய இதழான 'மல்லிகை'யும் தனது முகப்பில் பதித்து கௌரவப் படுத்தியுள்ளது.

எழுத்தாளர்.தி.ஞானசேகரன் அவர்கள் யாழ்ப்பாணத்தில் புன்னாலை கட்டுவான் என்ற கிராமத்தை பிறப்பிடமாக கொண்டவர்.ஆரம்பக்கல்வியை உரும்பிராய் இந்துக்கல்லூரியில் கற்றார். பின்னர் இலங்கை மருத்து கல்லூரியில் மருத்துவ கல்வியினை பெற்றுக்கொண்டார்.அதனை தொடர்ந்து மலையகத்திலே மூன்று தசாப்தத்துக்கும் மேலாக வைத்தியராக கடமையாற்றினார். யாழ்பாணத்திலும் மலையகத்திலும் அவர் பெற்றுக்கொண்ட அனுபவங்களே சிறுகதைகளாகவும்இ நாவல்களானவும் மலர்ந்துள்ளதை அவதானிக்கலாம்.

ஈழத்தின் சிறுகதை இலக்கிய வளர்ச்சியினை பிரதிபலிக்கும் வகையில் அமைந்த இவரது படைப்புக்களில் புதிய நோக்கு இழையோடுகிறது. ஆழமான சமுதாய பார்வையை வீசி நிற்கும் இவரது கதைகளில் சுபீட்ஷமும் செழுமையும் நிறைந்து புதிய தொரு தரிசனத்தை தருகின்றன.
ஒரு தசாப்தகாலமாக 'ஞானம்' என்ற கலை இலக்கிய சஞ்சிகையினை இடைவிடாது மாதந்தோரும் வெளியிட்டு வரும் இவர் ஒரு வைத்தியராக இருந்தும் கலைமீது கொண்ட தீராத காதலால் பேராதனை பல்கலைக்கழகத்தில் வெளிவாரி பட்டப்படிப்பபையும் நிறைவுசெய்துள்ளார்.
உலகளாவிய ரீதியல் நடைபெற்ற பல கலை இலக்கிய நிகழ்வுகள் பலவற்றில் பங்குபற்றியுள்ள இவர் இலங்கையில் நடைபெற்ற உலக தமிழ் எழுத்தாளர் விழாவின் இணைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
பல தேசிய மட்ட  இலக்கிய போட்டிகளில் பரிசில்கள் விருதுகள் பெற்றுள்ள எழுத்தாளர் ஞானசேகரன் அவர்களுக்கு இலங்கை அரசின் கலாபூஷண விருதும் வழங்கப்பட்டுள்ளது.

இவரது பல நூல்கள் வெளிவந்துள்ளன.அதில்

•    கா. சிவத்தம்பி - இலக்கியமும் வாழ்க்கையும்
•    ஞானசேகரன் சிறுகதைகள்
•    அவுஸ்திரேலியப் பயணக்கதை
•    புரிதலும் பகிர்தலும்
•    அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்
•    கவ்வாத்து
•    லயத்துச் சிறைகள்
•    குருதிமலை
•    புதிய சுவடுகள்
•    காலதரிசனம்

ஆகிய நூல்கள் வெளிவந்துள்ளன. அதில் 'அல்ஷேசனும் ஒரு பூனைக்குட்டியும்' என்ற இவரது சிறுகதை நூல் இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பாட நூலக வைக்கப்பட்டுள்ளது.



இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக