தித்திக்குதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தித்திக்குதே லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 2 பிப்ரவரி, 2011

எதிர்வீட்டு நாய்!.


ருறங்கும் நேரத்தில்
தொலைபேசினாய்-அன்று
யாருமற்ற என்மனதை
விலைபேசினாய்
காதலெனும் மீன்பிடிக்க
வலைவீசினாய்-என்னை
காதலித்து காதலித்து
கவிபூசினாய்-பின்னர்
எச்சிலையே போவென்று
எனைவீசினாய்
எச்சமிட்டு எச்சரித்து
எனக்கேசினாய் -உனக்கு
அப்பொழுது நான்தெரிந்தேன்
உலகழகனாய்
இப்பொழுது நானுனக்கு....
எதிர்வீட்டு நாய்!.

                                நன்றி.
*தித்திக்குதே-வசந்தம் தொலைக்காட்சி

ஞாயிறு, 30 ஜனவரி, 2011

உயிர்வண்டு..!


யிர்வண்டு உனைக்கண்டு ரீங்காரம் பாடும்!
உணர்வெங்கும் கவிபொங்கி தேனாக ஓடும்!
பயிர்காடு நிலம்யாவும் பனிதின்னும் நேரம்!
பசியாடும் வேளையிலும் கவியென்னுள் ஊறும்!

வளமான தேன்கவியே வாசமுடன் வாழும்!
வாழ்வெடுத்து பேசாத பாட்டொருநாள் வீழும்
உளமார நான்பாடல் பாடுகிறேன் நாளும்!
உணர்வுகளை உசுப்புமவை உயிர்த்தமிழை ஆளும்!

நன்றி*சுடர்ஒளி
*தித்திக்குதே







தோல்வி..!


தோ
ல்விகளை
தோற்கடிக்கப் பழகு-
இன்றேல்
உன்தோள்மீது ஏறிநிற்கும் உலகு
ஆணுக்கு அழுவதுவா அழகு ?-
இன்றே
அனலாகு வணங்கி நிற்கும் உலகு....

                                       நன்றி
*தித்திக்குதே-(வசந்தம் தொலைக்காட்சி)

இழுத்துவைத்து அறுப்போம்!



மிழை தமிழாக உச்சரிக்கவேண்டும்-அதன்
தலையறுக்க வருபவரை எச்சரிக்கவேண்டும்...…
எண்திசையும் எம்தமிழை எத்திவைக்கவேண்டும்..-அதை
எரிக்கவரும் கழுத்துக்கு கத்திவைக்கவேண்டும்...

குழந்தைநாவில் இனியதமிழை தொட்டுவைக்கவேண்டும்-அதை
குறையிலாமல் பேசும் வாயில் லட்டுவைக்கவேண்டும்...
எதிரிதமிழில் ஏசுறானா விட்டுவைக்கவேண்டும்-தமிழன்
தமிழில் பேசக் கூசுறானா சுட்டுவைக்கவேண்டும்...!!

இன்றுமுதல் எம்மொழியில் பற்றுடனே இருப்போம்-அதை
இழிந்ததென்று சொல்லும்நாவை இழுத்துவைத்து அறுப்போம்!
உயிரைகேட்டு நின்றால்கூட உடனேநாங்கள் கொடுப்போம்-ஆனால்
உயிர்தமிழை அழிக்கவரின் தலையைநாங்கள் எடுப்போம்..!

                               நன்றி.
*வெளிச்சம்FM
*தித்திக்குதே-வசந்தம் தொலைக்காட்சி