இ லங்கையில் ,
தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய அடையாளங்களைப் பிரதிபலித்தபடி , தவிர்க்க முடியாதவொரு அடையாளமாகத் திகழும் ' வசந்தம் தொலைக்காட்சி ' யானது , அதன் நான்காவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . இலங்கையின் முதலாவது தொலைக்காட்சி ஒளிபரப்புச் சேவையான சுயாதீன ஊடக வலையமைப்பின் ஒரு அங்கமாக இருந்து வரும் வசந்தம் தொலைக்காட்சியானது , 2009.06.25 அன்று ஆரம்பிக்கப்பட்டது . வெற்றிகரமான முப்பத்தாறு மாதங்களைக் கடந்துவந்துள்ள இதன் அபார வளர்ச்சியானது , இன்று பலரையும் இதன் பக்கம் ஈர்த்து , தலைநிமிர்ந்து பார்க்க வைத்துள்ளது .
வசந்தம்
தொலைக்காட்சியானது , தனது ஒளிபரப்பை ஆரம்பித்த நாளிலிருந்தே பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கி , இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு முன்னோடிகளாக விளங்கும் தென்னிந்திய தமிழ்த் தொலைக்காட்சிகளுக்கு
இணையான பாரிய வளர்ச்சியை , மூன்று வருடங்களுக்குள்ளேயே கண்டிருக்கிறது . இலங்கைக்கு வசந்தத்தைக் கொண்டு வந்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியின் முகாமையாளராக இருக்கும் திரு . முருகேசு குலேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் , துடிப்பும் ஆளுமையும் திறமையுமுள்ள இளைய தலைமுறை நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களும் , அறிவிப்பாளர்களும் இதன் வளர்ச்சியின் வேர்களாக இருந்து கொண்டிருக்கின்றனர் .
VIDEO
நமது நாட்டில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அனேகமானவை , தென்னிந்தியத் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளே . இந் நிலையை மாற்றிய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சேரும் . வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் எல்லா நிகழ்ச்சிகளும்போல எமது நாட்டு வளங்களைப் பயன்படுத்தி , திறமை வாய்ந்த எமது நாட்டுத் தயாரிப்பாளர்கள் தயாரித்த நிகழ்ச்சிகளே .
இனி , வசந்தம் தொலைக்காட்சியானது , தமிழ் பேசும் மக்களினது , சுயத்தையும் பண்பாட்டையும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாக்கவென செய்திருக்கும் சாதனைகளை வெற்றிகரமான மூன்றாவது வருட நிறைவான இந் நன்னாளில் மீட்டிப்பார்ப்போம் .
VIDEO
இலங்கையில்
ஒரு குடும்பத் தொலைக்காட்சி எனும் நற்பெயரைப் பெற்று , தன்னை வளர்த்துக் கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி . அதுவரையில் தமிழ்த் தொலைக்காட்சிகள் எனப்படுபவை , வெறுமனே நேரத்தைக் கழிக்கவும் , பொழுதுபோக்கவும் மட்டுமேயானவை என்ற கருத்தினை மாற்றிய வசந்தம் தொலைக்காட்சியில் , காலை ஆறு மணியிலிருந்து இரவு பன்னிரண்டு மணி வரை சிறுவர் முதல் பெரியோர் வரை எல்லோருமே கண்டுகளிக்கவும் பயன்பெறவுமான பல நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன .
VIDEO
நாட்டு நடப்புகளைத் தெரிந்துகொள்ளவும் , பார்த்து ரசிக்கவுமென அக் காலத்தில் அனேகமான சகோதர மொழித் தொலைக்காட்சிகளையே நாட வேண்டியிருந்த நிலையை மாற்றியதோடு நிற்காமல் , முப்பது வருட கால யுத்த முடிவுக்குப் பிறகு , தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒருமித்து ரசிக்கக் கூடியதான நிகழ்ச்சிகளையும் தந்து கொண்டிருக்கிறது வசந்தம் தொலைக்காட்சி .
VIDEO
வசந்தம்
தொலைக்காட்சியானது , தொலைக்காட்சியோடு மட்டும் தனது சேவையை நிறுத்தி விடாமல் , நேயர்களை மகிழ்விக்கவென அவர்கள் முன் நேரடியாகவும் களமிறங்குகிறது . இதன் முதல் கட்டமாக , தென்னிந்திய கலைஞர்களைக் கொண்டு யாழ் துரையப்பா விளையாட்டரங்கில் நடத்திய , முதலாவது இசை நிகழ்ச்சியைச் சொல்லலாம் . பல்லாயிரக்கணக்கான நேயர்களை வசீகரித்த இந் நிகழ்ச்சியில் பிரபல தென்னிந்திய இசையமைப்பாளர் விஜய் அன்ரனி , தனது குழுவினரோடு கலந்து கொண்டார் . இதுவே அவர் செய்த முதலாவது மேடை இசை நிகழ்ச்சியும் கூட . வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரசித்தனர் . அத்தோடு வரலாற்றிலேயே முதன்முறையாக நேரடி இசை நிகழ்ச்சியொன்றை பருத்தித்துறையில் நடத்திய பெருமையும் வசந்தம் தொலைக்காட்சியையே சாரும் .
VIDEO
சித்திரைப்
புத்தாண்டை முன்னிட்டு , கடந்த வருடங்களிலும் , இந்த வருடமும் வசந்தம் தொலைக்காட்சியின் அனுசரணையோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் நடைபெற்ற போட்டிகளில் மிக ஆர்வத்தோடு , அதிகளவான இளைஞர்களும் யுவதிகளும் பங்குபற்றி பரிசில்களை அள்ளிக் கொண்டமை குறிப்பிடத்தக்கது . பலர் கலந்துகொண்ட , கடந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட விளையாட்டுப் போட்டியானது , யாழ் கோட்டை முன்றலிலிருந்தும் , வல்வெட்டித்துறையிலிருந்தும் நேரடியாக ஒளிபரப்பானதோடு , இந்த வருடத்தின் சித்திரைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் யாழ் . மானிப்பாய் மருதடிப் பிள்ளையார் ஆலய முன்றலிலிருந்து நேரடியாக ஒளிபரப்பானதோடு நேரிலும் தொலைக்காட்சியிலும் பல்லாயிரக்கணக்கான நேயர்கள் ஒரே நேரத்தில் இந் நிகழ்வுகளை நேரடியாகக் கண்டு ரசித்தனர் .
VIDEO
தனது அனைத்து நிகழ்ச்சிகளாலும் பூரணம் பெற்றுள்ள வசந்தம் தொலைக்காட்சி , இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சி வரலாறுகளிலேயே முதன்முறையாக ' தசாவதாரம் ', ' சிங்கம் ', ' வேட்டைக்காரன் ', ' நான் மகான் அல்ல ', ' வானம் ', ' மாசி ', ' முரண் ', ' வந்தான் வென்றான் ' போன்ற வெற்றிப் படங்களை ஒளிபரப்பி அநேக நேயர்களைத் தம் வசம் ஈர்த்திருக்கிறது . அத்தோடு இதில் ஒளிபரப்பாகும் சினிமா நிகழ்ச்சிகளும் , பிரபல நெடுந்தொடர்களும் வசந்தம் தொலைக்காட்சியை , நேயர்கள் பக்கம் நெருங்க வைத்திருக்கின்றன .
VIDEO
வாரம் தோறும் ஒளிபரப்பாகும் ஒரு மணித்தியாலக் கலை நிகழ்ச்சியான தூவானத்தில் , எழுத்தாளர்கள் அறிமுகம் , சிறந்த இணையத்தள அறிமுகம் , உலக விருதுகள் பெற்ற குறும்படங்கள் மற்றும் கவித்துவமான பாடல்கள் ஒளிபரப்பு என்பனவற்றோடு நல்ல கவிதைகளும் இடம்பெறுகின்றன . இந்த நிகழ்ச்சியானது கடந்த வருடத்தின் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கான அரச விருதையும் சுவீகரித்துக் கொண்டது என்பதுவும் குறிப்பிடத்தக்கது . அத்தோடு நமது நாட்டில் கண்டுகொள்ளப்படாமலிருக்கும் நல்ல பல பழைய கலைஞர்களையும் , புதிய கலைஞர்களையும் கலையகத்துக்கு வரவழைத்து கௌரவிக்கும் இசை நிகழ்ச்சியான ' புது வசந்தம் ', ஒவ்வொரு ஞாயிறன்றும் இரவு ஏழு மணிக்கு புதிய , இடைக்கால , பழைய பாடல்களோடு ஒளிபரப்பாகி நேயர்களைப் பெரிதும் கவர்ந்திருக்கிறது .
VIDEO
சமையல் மற்றும் பயனுள்ள விடயங்களை நேயர்களுக்கு , முக்கியமாக பெண்களுக்குத் தரும் ' கண்மணி ' நிகழ்ச்சியும் , மருத்துவம் சம்பந்தமாக நாம் தெரிந்திருக்க வேண்டிய தகவல்களை விரிவாக வழங்கும் ' ஆரோக்கியம் ' நிகழ்ச்சியும் பலரது பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது . அத்தோடு ' ஏழாம் நாள் ', ' சுற்றிவரும் பூமி ', ' உலகப் பார்வை ' ஆகிய பொது அறிவை வளர்க்கும் சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள் அனைத்துத் தரப்பு நேயர்களினதும் கவனத்தைத் தம் வசம் ஈர்த்துள்ளன . திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகும் , புதிய பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான 'Hello வசந்தம் '
நிகழ்ச்சியும் இடைக்காலப் பாடல்களை விரும்பும் நேயர்களுக்கான ' நினைத்தாலே இனிக்கும் ' நிகழ்ச்சியும் பலரையும் ஈர்த்துள்ளன .
VIDEO
சனிக்கிழமை தோறும் இரவு 8.30 க்கு ஒளிபரப்பாகும் ' முகமூடி ' நிகழ்ச்சியானது , சமூகத்தில் மறைந்திருக்கும் பல குற்றங்களையும் துயரங்களையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதோடு , பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளைப் பெற்றுக் கொடுக்கும் சிறந்தவொரு நிகழ்ச்சியாக பலரதும் கவனத்தை ஈர்க்கிறது . அத்தோடு கலையுலகத்துக்குச் சேவையாற்றும் முக்கியமானவர்களை நேரில் சந்தித்து சிரேஷ்ட அறிவிப்பாளரான திரு . விஸ்வநாதன் தொகுத்து வழங்கும் ' ஆட்டோகிராப் ' நிகழ்ச்சியானது ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாவதோடு நேயர்கள் பலரதும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது .
VIDEO
வசந்தம் தொலைக்காட்சியானது தனது மூன்றாம் ஆண்டு நிறைவோடு ' கல்விக்குக் கை கொடுப்போம் , வறுமையை இல்லாதொழிப்போம் , ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்புவோம் ' எனும் தொனிப் பொருளில் ' வசந்தம் TV யின் சமூகப் பணி ' எனும் சமூகப் பணியையும் ஆரம்பித்துள்ளது . யாழ்ப்பாணத்துக்கு நேரடியாக வைத்தியக் குழுவினரோடு சென்று மக்களைச் சந்தித்து அவர்களது மருத்துவத் தேவைகளை முழுமையாகப் பூர்த்தி செய்யும் பணியை ஆரம்பித்திருக்கும் வசந்தம் தொலைக்காட்சியானது , பாடசாலை மாணவர்களுக்கும் போட்டிகளை நடத்தி பரிசுகளை வழங்கி அவர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறது .
VIDEO
கடந்த காலங்களில் கொழும்பில் மட்டும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த வசந்தம் தொலைக்காட்சியானது , தற்பொழுது யாழ்ப்பாணம் மற்றும் வடக்கு மாகாணம் முழுவதிலும் கொக்காவில் கோபுரத்தின் வழியாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது . கொழும்பில் UHF 10 அலைவரிசையிலும் , யாழ்ப்பாணத்தில் UHF
25 அலைவரிசையிலும் , DIALOG TV, PEO TV, LBN போன்றவை மூலமும்
www.vasantham.lk இணையத்தளம் மூலமும் கண்டுகளிக்கப்படக் கூடிய வசந்தம் தொலைக்காட்சியானது , விரைவில் கிழக்கு மாகாணம் , மலையகம் மற்றும் நாடு முழுவதிலும் வசந்தத்தைக் கொண்டு வரவிருக்கிறது .
VIDEO VIDEO