இசை இளவரசர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இசை இளவரசர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

சக்தி TV யின் ''இசை இளவரசர்கள்''




காதல் என்றாயே 
கண்ணாலே கடத்திச் சென்றாயே...

2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.8.07) எழுதப்பட்ட பாடல் இது.
 இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது. 
பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.


இசை:  'இசை இளவரசர்கள்' புகழ்  C.சுதர்ஷன் 
பாடல் வரிகள்: 'இசை இளவரசர்கள்' புகழ் கவிஞர் அஸ்மின்


பல்லவி

காதல் என்றாயே...
கண்ணாலே கடத்திச் சென்றாயே
நடுக் கடல்மீது கண்ணைக் கட்டி
கவிழ்த்து சென்றாயே...

உயிரே என்றாயே...
என்நெஞ்சின் உள்ளே சென்றாயே...
உன்பெயர் சொல்லி துடிக்கும்  நெஞ்சை
அடித்துக்கொன்றாயே...


அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்
நிலவே என்காதல் தேயாது வாழும்
மறந்தாயே தேனே
இறந்தேனே நானே..

சரணம்-01.

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தாயே...
அனலான புனலாகி இன்று
என்நெஞ்சை எரித்தாயே...!

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்கண்கள் சிவந்தால்நான் அழுவேனடி
உனக்காக கையேந்தி தொழுவேனடி

நிலவோடு... உறவாடி
நினைவுகள் நிதமின்று கவிதையில்
கரைகிறதே....


சரணம் - 02

உனக்காக எனக்குள்ளே ஒரு
தொடுவானம் செய்தேனே..
எதற்காக நிலவேநீ விட்டு
தொலை தூரம் போனாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

நீ தூங்க நாளும்நான் விழிப்பேனடி...
நீ கேட்டால் உயிரைநான் அளிப்பேனடி...

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...


ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

அண்ணாச்சி கோட்டையிலே அவன வெல்ல யாருமில்ல...(புதிய பாடல்)



பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்


பல்லவி

ண்ணாச்சி கோட்டையிலே
அவன வெல்ல யாருமில்ல
கருவாச்சி பெத்தபுள்ள
கத்தி வச்சா கழுத்து இல்ல!

சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு....
(அண்ணாச்சி கோட்டையிலே)

   சரணங்கள்

பாலிருக்குது பழமிருக்குது
பருகிடவா மச்சான்...
பார்வையாலே தேகமெங்கும்
தேனொழுக வச்சான்...

ஆசபோல மாம்பழத்த
அறுத்துத் தின்னடா-நான்
காசுபோட்டா விடிய விடிய
கனியும் பெண்ணடா

கொண்டுவாடா சோடா-என்ன
கொல்ல வந்த வேடா-இது
திண்டுக்கல்லு பீடா-வந்து
திண்டுவிட்டு போடா...                      
  
(அண்ணாச்சி கோட்டையிலே)
கள்ளிருக்கும் பானையிலே
கையவச்சுப் போனாய்..
உள்ளிருக்கும் பள்ளத்தில
ஒழுகுதடா தேனாய்..

வில்லெனவே மாறுகிறேன்
அம்பெடுத்து வாடா
புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
மேஞ்சப்புட்டு போடா...

அறுவா மீசக்காரா-என்ன
ஆளவந்த சூரா
பருவமுண்டு 'மோரா'-நீ
பருகுவந்து ஜோரா....                       

  (அண்ணாச்சி கோட்டையிலே)


2010.12.15