இலங்கை ஊடகவியலாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இலங்கை ஊடகவியலாளர்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

படைப்பாளி அறிமுகம் -08- ''இருக்கிறம்'' சஞ்ஜீத்


லங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான அருளானந்தம் சஞ்ஜீத் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.இவர்புகைப்படக்கலை,கேலிச்சித்திரம்,குறுந்திரைப்படம்,ஊடகத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார்.  

ரம்பக் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பின் உயர்தரம் வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் நுண்கலைமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் 'இருக்கிறம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர், அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதே பல உள்ளுர் ஊடகங்களுக்கும் சர்வதேச இணையத்தள ஊடகங்களுக்கும் பிரதேச செய்தியாளராகவும் கார்ட்டூனிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.



2003ம் ஆண்டளவில் யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளில் இவர் செய்தி நிருபராக பல சமகால கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அவர்களுடைய வேதனைகளையும் கார்ட்டூன்களால் சித்தரித்துள்ளார்.யாழில்  இருந்து  வெளிவந்த பத்திரிகைகளிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்திருக்கின்றன. 



மூகப் பிரச்சினைகளை தனது படைப்புக்களுடாக வெளிப்படுத்திவரும் இவர் சிறந்த புகைப்படக் கலைஞருமாவார்.
2007 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் 'வர்ணமொழி' என்ற கண்காட்சியில் 'த கிளிக்' என்ற புகைப்படக் காட்சியொன்றை நடத்தினார். 2008 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் 'விழிகளின் வழியே' என்ற என்ற புகைப்படக் கண்காட்சியொன்றையும் யாழ் பெரியபுலம் மாகாவித்தியாலயத்தில் யாழ் றோட்டரிக்கழக அனுசரணையில் நடத்தி பலரதும் கவனத்தையும் நல்லறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். 



மிழ்பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக 'இருக்கிறம்' சஞ்சிகையை பல சவால்களுக்கும் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டு சமூகத்து எதிரான அநீதிகளை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க பத்திரிகையாக 2009 முதல் மாற்றியமைத்த இவரின் பணியை கௌரவப்படுத்தும் முகமாக 2010 ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் 
''சிறந்த சஞ்சிகை ஆசிரியருக்கான விருது'' இவருக்குக் கிடைத்தது.



பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் இவரின் நெறியாள்கையில் உருவான 'வதை' 'நெருப்பு' என்ற இரண்டு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிவரும் இவர் இதுவரை தான் பத்திரிகைகளில் வரைந்த கேலிச்சித்திரங்களை தொகுத்து நூலாகவும் வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான எழுத்து நடைமூலம் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலமும் இலங்கையின் ஊடகத்துறையில் முத்திரை பதித்துவரும் இளம் ஊடகவியலாளர் அருள்-சஞ்ஜீத் அவர்களின் படைப்புலக பணியில் மேலும் பல சுவடுகளைப் பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


ஞாயிறு, 13 மார்ச், 2011

படைப்பாளி அறிமுகம்-06- எழுத்தாளர் எஸ்.ஐ.நாகூர்கனி

ண்ணத் தமிழுக்கு  வளம் சேர்க்கும் எண்ணற்ற எழுத்தாளர்களை ஈன்றெடுத்து, இலங்கையின் இலக்கிய நந்தவனத்துக்கு நறுமணத்தை வழங்கி வாகை சூடிய ஊர்களில் வாழைத்தோட்டத்துக்கு என்றே தனித்துவமான வரலாறு இருக்கின்றது.
 

இலங்கையில் அதிக பத்திரிகைகள் பூத்து அறிவுமணம் பரப்பிய பத்திரிகை பாரம்பரியம் மிக்க அந்த வாழை மண்ணில் பிறந்து,வாழையடி வாழையாக சங்கத்தமிழை சந்தனப் பல்லக்கில் சுமந்து நின்ற வாண்மை மிக்க படைப்பாளிகளுள் சமுதாய குரலாக ஒலிக்கும் சத்திய எழுத்தாளர்தான், கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்கள்.
 

இலங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான இவர் கவிதை,கட்டுரை, சிறுகதை,நாடகம்,பத்தி,ஆய்வு போன்ற துறைகளில் மட்டுமல்லாது பத்திரிகை துறையிலும் கடந்த நான்கு தசாப்தத்துக்கும் மேலாக  காலூன்றி தடம்பதித்துள்ளார்.மேலும், இவர் இலங்கையில் தமிழில் துப்பாய்வுத்துறை ( INVESTIGATIVE JOURNALIST) பத்திரிகையாளர்களுக்கு முன்னோடியாகவும் விளங்குகின்றார்.
இலங்கை ''மல்லிகை'' சஞ்சிகையின் முகப்பை அலங்கரிக்கும்  கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி

கொழும்பு சாஹிரா கல்லூரியின் பழைய மாணவரான இவர்.கொழும்பு பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டத்தை நிறைவு செய்துள்ளார்.
 

1963ம் ஆண்டு  தினகரன் 'பாலர்கழகம்' பகுதியில் பிரசுரமான கல்வி கற்றல் என்ற மரபுக்கவிதை  மூலம் முதன் முதலாக இலக்கிய உலகத்தில் காலடி எடுத்துவைத்த இவரது படைப்புக்கள்
தமிழ்ச் செல்வன்,முஸாபி
ர்,முஸல்மான் ,அமுதன், இதயக்கனி,இப்னு இஸ்மாயில், நிஹார் மணாளன், சதுர்ச்செல்வன்,முல்லா ஆகிய புனை பெயர்களில் இலங்கையின் தேசிய பத்திரிகைள்,சஞ்சிகைகள் மட்டுமல்லாது சர்வதேச இலக்கிய ஏடுகளிலும் வெளிவந்துள்ளன.
 

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் முஸ்லிம் சேவையில் 'ஊடுருவல் 'என்ற நிகழ்ச்சிமூலம் சமூக அவலங்களை படம்பிடித்து காட்டிய இவர்' பத்திரிகை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களின் பட்டறையில் பட்டைதீட்டப்பட்ட வைரம். இலங்கை வலம்புரி கவிதா வட்டம் என்ற அமைப்பின் அமைப்பாளராக இருந்து பல புதிய கவிஞர்கள்  உருவாவதற்கு துணையாக நின்றவர்.


2002 சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய விழா விருது வழங்கும் நிகழ்வு

 

தேசிய மட்டத்தில் நடைபெற்ற பல கலை-இலக்கிய போட்டிகளில் வெற்றியீட்டியுள்ள இவருக்கு கிடைத்த கௌரவங்கள்.
 

01.    1991ம்ஆண்டு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்களுக்கான  இராஜங்க அமைச்சு நடாத்திய முதலாவது வாழ்வோரை வாழ்த்துவோம் நிகழ்வில் 'காதிபுல் ஹக்' சத்திய எழுத்தாளன் என்ற பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.

02.    1994 ம்ஆண்டு தமிழ்நாடு தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் நடத்தப்பட்ட 15வது திருக்குர்ஆன் மாநாட்டில் ''சமுதாய எழுத்தாளர்'' பட்டமும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


03.    1996ம்ஆண்டு இரத்தினபுரியில் அமைந்துள்ள அகில இலங்கை நல்லுறவு ஒன்றியம் நடத்திய கலை-இலக்கிய சமூகப்பணியாளர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் ''சமுதாயக்காவலன்'' பட்டம் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுளார்.

04.    2002ம்ஆண்டு இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் கொழும்பில் நடத்திய சர்வதேச இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சிரேஷ்;ட்ட படைப்பாளிக்கான விருதும் பொற்கிழியும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளார்.


05.    2007ம் ஆண்டு இலங்கை அரசின் கலாச்சார அமைச்சினால் சிரேஷ்;ட்ட கலைஞர்களுக்கு வழங்கப்படும் 'கலாபூசணம்' பட்டம் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.



கவியரங்கில் கவிதை பொழியும் கவிஞர் எஸ்.ஐ.நாகூர்கனி

இவர் வெளியிட்டுள்ள நூல்கள்.
 

01.    தூரத்து பூபாளம் (சிறுகதை தொகுதி-1983)
02.    அவள் நெஞ்சுக்குத் தெரியும் (நாவல்-1986)
03.    ஒரு வெள்ளிவழா பார்வை (எழுத்தாக்க தொகுப்பு நூல்-1989)
04.    காலத்தின் சுவடுகள் (சமூக விமர்சன நூல்-1993)
05.    நன்றி மறப்போம் (வரலாறு -1998)


தனது தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் கலை-இலக்கியம், பத்திரிகைத் துறையில் முத்திரை பதித்துவரும் 

எழுத்தாளர் கலாபூசணம் எஸ்.ஐ.நாகூர்கனி அவர்களின் எழுத்துப்பணி மேலும் மேலும் சுவடுகளை  பதிக்க நாமும் வாழ்த்துவோம்.