பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்
பல்லவி
அண்ணாச்சி கோட்டையிலே
அவன வெல்ல யாருமில்ல
கருவாச்சி பெத்தபுள்ள
கத்தி வச்சா கழுத்து இல்ல!
சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு....
(அண்ணாச்சி கோட்டையிலே)
சரணங்கள்
பாலிருக்குது பழமிருக்குது
பருகிடவா மச்சான்...
பார்வையாலே தேகமெங்கும்
தேனொழுக வச்சான்...
ஆசபோல மாம்பழத்த
அறுத்துத் தின்னடா-நான்
காசுபோட்டா விடிய விடிய
கனியும் பெண்ணடா
கொண்டுவாடா சோடா-என்ன
கொல்ல வந்த வேடா-இது
திண்டுக்கல்லு பீடா-வந்து
திண்டுவிட்டு போடா...
(அண்ணாச்சி கோட்டையிலே)
கள்ளிருக்கும் பானையிலே
கையவச்சுப் போனாய்..
உள்ளிருக்கும் பள்ளத்தில
ஒழுகுதடா தேனாய்..
வில்லெனவே மாறுகிறேன்
அம்பெடுத்து வாடா
புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
மேஞ்சப்புட்டு போடா...
அறுவா மீசக்காரா-என்ன
ஆளவந்த சூரா
பருவமுண்டு 'மோரா'-நீ
பருகுவந்து ஜோரா....
(அண்ணாச்சி கோட்டையிலே)
2010.12.15