காதல் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல் பாடல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 செப்டம்பர், 2011

விழியில் விழுந்தாயே...........(புதிய பாடல் 2011)




2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.09.11) எழுதப்பட்ட பாடல் இது.இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது.பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.

•    பல்லவி

விழியில் விழுந்தாயே...
என்நெஞ்சில் நொடியில் மலர்ந்தாயே...
என்வழியெங்கும் வழியும் கண்ணீர்
துளியில் தெரிந்தாயே...

கனவில் நுழைந்தாயே....
என்நெஞ்சின் கருவில் விளைந்தாயே
உன்னை தினந்தோரும் எண்ணும் பூவை
தீயில் எறிந்தாயே....

•    அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்...
நினைவுகள் கங்கை நதிபோன்றே பாயும்....
நீயில்லா வாழ்க்கை
தீமேலே யாக்கை

•    சரணம் - 01

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தேனே...
அணுவெங்கும் தீமூட்டி என்னை
அடியோடு எரித்தாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே..
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

வாழ்வெல்லாம் உனக்காக இருப்பேனடா...
ஒருவார்த்தை நீசொன்னால் இறப்பேனடா...

இரவோடு உறவாடி
நினைவுகள் நிதமின்று
துயரத்தில் துடிக்கிறதே....

•    சரணம் - 02

கலையாடும் அழகான வண்ண
சிலையாக நின்றேனே...
அலையாடும் கடல்போல வந்து
விளையாடிப் போனாயே....

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்வாசம் எனைவிட்டு அழியாதடா
என்நாடி நரம்பெங்கும் நீதானடா....

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...

,ir: Rju;rd;  
ghlfp: gpurhe;jpdp  
ghlyhrpupau:; ftpQu; m];kpd;


    ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

    காதலர் தின சிறப்புப் பாடல் 2011




     ''இது இலங்கை கலைஞர்களின் படைப்பு''

    உலகத்தின் பூக்களிலே உன்கூந்தல் வாசமடி..!
    உண்மையினை சொல்கின்றேன் நீதானென் தேசமடி..
    உன்னழகை கண்டாலே நிலவுக்கே கூசுமடி..
    உனக்காக மட்டும்தான் என்தென்றல் வீசுமடி...!

    எங்கோ பிறந்தவளே.
    எனக்குள்ளே மலர்ந்தவளே- உன்
    கம்பன் விழிகளினால்- நான்
    காவியமாகிவிட்டேன்-உன்
    காதல் பார்வைகளால்- நான்
    ஓவியனாகிவிட்டேன்....
                                                (எங்கோ பிறந்தவளே...)

    ஊரும் தெரியல...
    உறவும் புரியல..
    உன்னால் சூரியன் எரியலடி..
    நீயே உலகென..
    நினைத்தேன் உயிரென..
    என்னை உன்மனம் அறியலடி....

    கவிதை பேசும் கண்கள் கொண்டு
    கண்ணே என்னை கொள்ளையடி!
    இரவாய் போன எந்தன்வாழ்வில்
    இன்றே வந்து வெள்ளையடி.... 

                                           (எங்கோ பிறந்தவளே...) 
    எந்தன் காதலி
    உந்தன் பூவிழி
    சொந்தம் நானென சொல்லுதடி...!
    உந்தன் பூமொழி
    சிந்தும் தேன்துளி
    எந்தன் இரவினை கொல்லுதடி...

    இதயத்தில் காதல் இருக்கின்றபோது
    இதழ்களை ஏனடி மூடுகிறாய்...?
    ஒருமுறை என்னைக் காணாது போனால்
    இருமுறை ஏனடி தேடுகிறாய்?
                                                   (எங்கோ பிறந்தவளே...)

    இசையமைத்து பாடியிருக்கின்றார்:

    'இசை இளவரசர்கள்' புகழ் கந்தப்பு ஜெயந்தன்
    பாடல் வரிகள்: கவிஞர் அஸ்மின்.
    பாடலுக்கான கதைச்சூழல்: இயக்குனர் ஏ.வெங்கடேஷ்

    தொடர்புகளுக்கு:
    K. ஜெயந்தன் (0770886358),
    கவிஞர் அஸ்மின் (094 778998620),
    vtvasmin@gmail.com