சனி, 21 ஏப்ரல், 2012

இலண்டன் தமிழ் வானொலிக்கு கவிஞர் அஸ்மின் வழங்கிய நேர்காணல்

லண்டன் தமிழ் வானொலிக்கு கவிஞர் அஸ்மின்
வழங்கிய நேர்காணல். (30.02.2012)
நேர்கண்டவர்:ஷைபா மலீக்



வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் பணிபுரியும் கவிஞர் அஸ்மின் ஈழத்தில் மரபுக் கவிதை எழுதி வரும் இளம் கவிஞர்களுள் முக்கிய கவிஞராகவும்,திரைப்பட பாடலாசிரியராகவும், அறியப்பட்டு வருகின்றார். விடை தேடும் வினாக்கள்(2002) விடியலின் ராகங்கள்(2003)ஆகிய கவிதை நூல்களின் ஆசிரியரான இவர் 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூலை மிக விரைவில் வெளியிட இருக்கின்றார்.

சக்திTVயினால் நடாத்தப்பட்ட'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சி மூலம் பாடலாசிரியராக அறிமுகமான இவர்,தேசியமட்ட கவிதைப் போட்டிகளில் கலந்து கொண்டு ஜனாதிபதி விருது(2001),பேராதனை பல்கலைக்கழகத்தின் தங்கப் பதக்கம் (2003) பெற்றுள்ளதோடு 2 முறை சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010,2011) ,அகஸ்தியர் விருது (2011), உட்பட 10க்கும் மேற்பட்ட விருதுகளையும் பெற்றுள்ளார்.

இவரது இலக்கிய பணியை பாராட்டி 'தடாகம்' கலை இலக்கிய அமைப்பு ''கலைத்தீபம்'' என்ற பட்டத்தினையும் 'லக்ஸ்டோ' ஊடக அமைப்பு ''கலைமுத்து'' என்ற பட்டத்தினையும் அண்மையில் வழங்கி கௌரவித்துள்ளன.
சுபாசெவ்வேளின் தயாரிப்பில் இயக்குனர் கேசவராஜின் இயக்கத்தில் வெளிவரவுள்ள ''பனைமரக்காடு'' தமிழ் திரைப்படத்தில் பாடல்களை எழுதியிருக்கும் இவர் ஜீவா சங்கரின் இயக்கத்தில் விஜய் அன்டனியின் நடிப்பில் வெளிவரவுள்ள ''நான்'' திரைப்படத்தில் இசையமைப்பாளர் விஜய் அன்டனியின் இசையில் பாடல் எழுதியுள்ளார்.
'செந்தூரம்' என்ற பத்திரிகை இணைப்பிதழும் 'கவிஞன்' என்ற சஞ்சிகையும் இவருடைய ஒளிப்படத்தை அட்டைப் படத்தில் இட்டுச் சிறப்பித்துள்ளன.

வெள்ளி, 13 ஏப்ரல், 2012

இசையமைப்பாளர் வித்தியாசாகரின் இசையில் கவிஞர் அஸ்மினின் புதிய பாடல்





''நீலத்தாமரை''  என்ற மலையாள படத்தில் இசையமைப்பாளர் வித்தியாசகரின் இசையில் வெளிவந்த ''அனுராகவி லோட்சனனாயி..'' என்ற பாடலின் இசையில் லண்டன் தமிழ் வானொலிக்காக 2011.04.13 தமிழ் வருடப் பிறப்புக்காக எழுதப்பட்டது இந்தப் பாடல்.
பாடலை  இலங்கை மாவனல்லையில் பிறந்து   தற்போது லண்டனில் வாழும் ஒலிபரப்பாளர் ஷைபா பேகம் , வவுனியாவை சேர்ந்த இசையமைப்பாளர், பாடகர் கந்தப்பு ஜெயந்தன் ஆகியோர் பாடியுள்ளனர்.

இந்தப்பாடல்  2011ம் ஆண்டு தேசிய மட்டத்தில் நடைபெற்ற 'வியர்வையின் ஒவியம்' பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்றுள்ளது.அத்தோடு இப்பாடலில் இடம்பெற்றுள்ள சிலவரிகள் 2012  சித்திரை  புத்தாண்டை முன்னிட்டு இலங்கையில் உள்ள தொலைபேசி வலையமைப்புக்களில் (Ringtone) பயன்படுத்தப்பட்டுள்ளது.அதனை இசையமைப்பாளர் ராஜ் தயாரிக்க குரல் கொடுத்துள்ளார் சங்கீதா பாக்கியராஜா.


பல்லவி
பூபாளம் வாழ்வினில் பாடும்
புதுக்கோலம் வாசலில் போடும்
புத்தாண்டில் புதிதாய் பிறப்போம்..!
சொந்தங்கள் கூடிடும் போது
சோகங்கள் வாழ்வினிலேது...?
சந்தோச வானில் நாங்கள் சிறகடிப்போம்
தினம் பறப்போம்! கலந்திருப்போம்....

அனுபல்லவி

பூபாளம் வாழ்வினில் பாடும்
புதுக்கோலம் வாசலில் போடும்
புத்தாண்டில் புதிதாய்  பிறப்போம்..!
புதுவாழ்வை தேடி நாங்கள் புறப்படுவோம்....

சரணம்-01

ஓ...நிலவும் நதியும் குலவும் இரவில்
உலகம் விளங்கும் நல்லொளியில்...
பிறக்கும் வருஷம் திறக்கும் வசந்தம்
இறக்கும் துயரங்கள் நொடியில்...

வாழ்க்கை வாங்கிவந்த வரமோ....
வாழ்வில் வானவில்லின் நிறமோ...
வாசம் வாழ்வில் நாளை வருமோ..
வருமோ.......

பூத்திருக்கும் பூமிப்பந்தை
புரட்டும் யுத்தம் தேவைதானோ....
நாங்கள் சேர் வோமே....

சரணம்-02

குழலும் யாழும் இசைக்கும்  உலகில்
மகிழ்வோ  கடல்போல் பெருகும்....
வெறியும் பகையும் மனதில் நிலைத்தால்
உறவோ பனிபோன்றே உறையும்
அன்பு வானில் சிறகு விரிப்போம்
இன்றே பழைய வாழ்வை எரிப்போம்
ஓன்றாய் புதிய உலகை ஜெயிப்போம்
ஜெயிப்போம்................

காத்திருக்கும் இன்ப வாழ்வை
காதலிப்போம்  இந்த நாளை
வாழ்வை வாழ் வோமே..