மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு முஸ்லிம் லீக் கௌரவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு முஸ்லிம் லீக் கௌரவம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 4 ஜூன், 2011

மலேசிய இலக்கிய மாநாட்டில் கவிதை பாடிய கவிஞர்களுக்கு முஸ்லிம் லீக் கௌரவம்



ண்மையில் நடைபெற்ற மலேசிய உலக இஸ்லாமிய இலக்கிய மாநாட்டில் மிகச் சிறப்பாக கவிதைகள் சமர்ப்பித்த இலங்கை கவிஞர்களான என். நஜ்முல் ஹூஸைன் மற்றும் பொத்துவில் அஸ்மின் ஆகியோரை கௌரவித்து பாராட்டும் நிகழ்வொன்று அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 8ஆம் திகதி புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு கொழும்பு 8, எல்விடிகல மாவத்தையில் அமைந்துள்ள சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

சம்மேளனத்தின் தேசியத் தலைவர் சட்டத்தரணி ரஷீத். எம். இம்தியாஸ் தலைமையில் நடைபெறும் இந் நிகழ்வில் நீதியமையச்சர்  ரவுப் ஹக்கீம், பிரதி அமைச்சர் பஷீர் சேகு தாவூத், பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ.எச்.எம். அஸ்வர், ஹஸன் அலி மற்றும் கல்விமான் எஸ். எச். எம் ஜெமீல், முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் ஆகியோரும் மற்றும் பல  இலக்கியவாதிகளும் பிரமுகர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளதாக அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சம்மேளன
பொதுச் செயலாளர் எஸ். லுக்மான் தெரிவித்துள்ளார்.