எனது பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
எனது பாடல்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 15 பிப்ரவரி, 2012

காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள எனது பாடல்....



அன்புள்ளவர்களுக்கு இது காதலர் தினத்தை முன்னிட்டு வெளிவந்துள்ள எனது பாடல் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
  • இசை: வேரணன் (UK)
  • வரிகள்:கவிஞர் அஸ்மின்
  • பாடகர்:ஆனந்த்(UK)
  • வெளியீடு: 14.2.2012

திங்கள், 6 பிப்ரவரி, 2012

'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!

பொத்துவிலின் முன்னேற்றத்துக்கு உழைத்த பல்துறையை 33 பேர் பொத்துவில் பிரதேச சபையினால் அண்மையில் கௌரவிக்கப்பட்டனர்.அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படம்.எனது அருகில் பொத்துவிலின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் சங்கர் அவர்கள் காணப்படுகின்றார்.



இது நான் புதிதாக இசையமைப்பாளர் ஷமீலின் இசையில் 
எழுதியுள்ள பாடல்.உங்கள் கருத்துக்களை கூறுங்கள்.
மிகவிரைவில் பாடலை நீங்கள் கேட்கலாம்.

பல்லவி

கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா
கொண்டாட 'புல்புல்' வாடா
துண்டாடும் கவலை தான்டா...
தூக்கிப் போடு
தூரம் தான்டா....!

அரிவாளை நெஞ்சில் தீட்டடா
அறிவாலே வென்று காட்டடா
அறியாமை அடித்து ஓட்டடா...
அஞ்சும் நெஞ்சை
கொல்வோம் வாடா...

அனுபல்லவி

போராடத் துணிந்தால் புயல்கூட பதுங்கும்
பூகம்பம் எமக்காய் பூப்பறிக்கும்....
நண்பாநாம் பயந்தால் நாய்கூட துரத்தும்
காக்கையும் தலையில் கூடுகட்டும்

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
ஒன்றாய் சேர்ந்து ஜெயிப்போம் வா..வா..



(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா...)

 (சொல்லிசை - Rap)

உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...
 

கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது 
வாடாதே...

சரணம் -01

இமயத்தில் ஏறவேண்டுமா..?
இதயத்தில் வீரம் கொண்டுவா
உலகத்தை ஆளவேண்டுமா..?
உடையாதே வா....
காற்றுக்கு சிறகு பூட்டலாம்
கனவுக்கு வர்ணம் தீட்டலாம்
கவலைக்கு தீயை மூட்டலாம்
நண்பா நீ வா.....

'வெற்றி'யின் வெற்றிப்பாட்டு எட்டு திக்கும் கேக்கட்டும்
நெற்றியின் வியர்வை பட்டு பூமி பூக்கட்டும்
நாசங்கள் உன்னை கண்டால் கைககள் கட்டி நிற்கட்டும்..
'நாசாவும்'உன்னிடத்தில் பாடம் கற்கட்டும்...!

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வானம் பூமி உனக்காய்தான்டா...



(கொண்டாடா 'ஜில்ஜில்' சோடா)

(சொல்லிசை - Rap)

உழவர்கள் உழுது
உலகமே அழுது
மறைந்திட்ட பொழுது
தோன்றாதே...

 கடவுளை தொழுது
புதுவிதி எழுது
நிலவிலும் பழுது
வாடாதே...

சரணம் - 02

சாகாமல் சாக வேண்டுமா
பெண்ணோடு காதல் செய்யடா
இறந்தாலும் வாழவேண்டுமா
என்னோடு வா...

வரலாறு படிக்க வேண்டுமா
வாய்பார்த்து நீயும் நில்லடா..!
வரலாறு படைக்க வேண்டுமா
போராட வா..!

அநியாயம் செய்வோ ரெல்லாம் உன்னை கண்டு அஞ்சட்டும்
'ஐநா'வும் உந்தன் காலில் வீழ்ந்து கெஞ்சட்டும்..!
மமதைகள் ஓடிப்போக மனிதம் மட்டும் மிஞ்சட்டும்
மாற்றானின் தோட்டப்பூவும் உன்னை கொஞ்சட்டும்...!

நண்பா வா.....
நண்பா வா...
நண்பா வா....
வாழும் உலகில் சொர்க்கம் செய்வோம்...!

*புல்புல்-  இசைபாடும்  பறவை

 31.1.2012

வியாழன், 17 நவம்பர், 2011

காந்தள் பூக்கும் தீவிலே - புதிய பாடல் (2011)


இசை:கே.ஜெயந்தன்
வரிகள்:கவிஞர் அஸ்மின்
பாடியோர்: கே.ஜெயந்தன் & கே.ஜெயப்பிரதா

   பல்லவி
  • ஆண்:
காந்தள் பூக்கும் தீவிலே..- உன்
காந்தப் பார்வை தீண்டுமா..?
பூங்காற்று எந்தன் பாடலை
உன் காதில் சேர்க்குமா....?
  • பெண்:
இந்த வானம் பூமி நீயடா
இன்று நானும் கூட நீயடா
நாம் காதல் செய்து வாழவே
இந்த ஜென்மம் போதுமா...?
  • ஆண்:
கனவிலும் உன்னை தேடுகின்றேன்
கண்களை விட்டு தூரப் போனாய்...
நினைவிலே வந்து காதல் சொல்லி
பூக்கள் வீசடி
ஒரு வார்த்தை பேசடி
(காந்தள்  பூக்கும் தீவிலே...)
  • சரணம்-01
  • பெண்:
ஒரு தடவை வந்து போனாய்
பல தடவை நொந்து போனேன்
உன் இதயம் மறந்தால் நான்
உயிருடனே உதிர்ந்து போவேன்..!

உன் சிரிப்பில் இதயம் தொலைத்தேன்
உன் தெருவில் தேடி அலைந்தேன்
உன் முகத்தை காணாமல்
உயிருடனே நாளும் புதைந்தேன்....!

  • ஆண்:

மேசையில் பலகதை
படிக்காமல் கிடக்கின்றதே...!
ஆசையில் என்விழி
உனை தேடி தவிக்கின்றதே...!

நான் உலகமே போற்றும்
கலைஞனடி!
உன் காதலால் இன்று
ரசிகனடி....
நீ உதட்டினால் என்னை
கொன்றிட வந்தால்
ஆயிரம் முறை நான் சாகரெடி...!

(காந்தள்  பூக்கும் தீவிலே)

  • ஆண்:
என்தேசம் நீயடி
உயிர் சுவாசம் நீயடி
என்வாழ்வும் நீயடி
எந்தன் ஆறுயிரே......!!
 
  • சரணம்-02
  • பெண்:
பேருந்தில் நெருங்கி இருந்தாய்
பேசாமல் நொருங்கி நகர்ந்தேன்...
உன்னோடு பேசாமல்
தனிமையில் பேசி சிரித்தேன்...

உன்பெயரை சொல்லி ரசித்தேன்..!
உனக்காக சமையல் பயின்றேன்
உன்னோடு வாழத்தான்
பூமியிலே பெண்ணாய் பிறந்தேன்..!

  • ஆண்:
விழியிலே உன் முகம்
விடிந்தாலும் இருக்கின்றதே...
வலியிலே என்மனம் 
துடித்தாலும் சிரிக்கின்றதே...

நான் உனக்கென பிறந்த
கவிஞனடி...!
நீ இதழ்களை கொண்டு
என்னைப்படி..!
உன் கண்களின் அழகை
ஒருமுறை பார்த்தால்
கவிதைகள் தற்கொலை செய்யுமடி..!!

(காந்தள்  பூக்கும் தீவிலே)
  • ஆண்: 
உயிர்பூவும் நீயடி..
என்தீவும் நீயடி..
இங்கு யாவும் நீயடி..
எந்தன் தேவதையே..

(காந்தள் பூக்கும் தீவிலே)


ஞாயிறு, 16 அக்டோபர், 2011

மின்னலிலே காணிவெட்டி....(பாடல்)




 •    பல்லவி

மின்னலிலே காணி வெட்டி வெண்ணிலவால் வீடு கட்டி
விண்வெளியில் வாழ்ந்தாலும் இறப்பாய்..!
இன்னல்படும் மக்களுக்கு உண்ணவழி செய்துவிட்டால்
வெண்ணிலவாய் உலகுக்கே  நீ இருப்பாய்...!

•    அனு பல்லவி

உண்ண வழியின்றி மண்ணை சமைக்கின்றார்
நீ  'பீஸா' உண்ணு கின்றாய்...
சின்னஞ் சிறுசுகள் கையை நீட்டினால்
தினம் அடித்து விரட்டு கின்றாய்...

இந்த உலகத்தில் மிக  உயர்ந்தவன்
என்றும் நீதான் என்று சொன்னாய்...
சொந்த உறவுகள் கந்த லணிகிறார்
அதைப் பார்த்து ரசித்து நின்றாய்...

பாழும் நெஞ்சை  இன்றே மாற்று...
பாலை மண்ணில்  தண்ணீர் ஊற்று...!
கோழை நெஞ்சை வெட்டிப் போட்டு
ஏழை வாழ்வில்  தீபங்கள் ஏற்று.....!

•    சரணம் - 01

பலகோடி மாந்தர்கள்
பசியாலே இறக்கின்றார்
கண்ணுள்ள மனிதர்கள்
குருடாய் இருக்கின்றார்..

காசுள்ளோர் நினைத்தாலே
காசினியே பூபூக்கும்
இல்லாத மக்களது
இல்லாமை பொடியாகும்

திருந்தாத எண்ணத்தை
தீயில் போட்டு...
வருந்தாத நெஞ்சுக்கு
தீயை மூட்டு...
வறுமைக்கு பிறந்தோர்க்கு
வாழ்வைக் காட்டு

வசந்தத்தை நீ கொண்டு வா....

திங்கள், 12 செப்டம்பர், 2011

விழியில் விழுந்தாயே...........(புதிய பாடல் 2011)




2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  'இசை இளவரசர்கள்' நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.09.11) எழுதப்பட்ட பாடல் இது.இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது.பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.

•    பல்லவி

விழியில் விழுந்தாயே...
என்நெஞ்சில் நொடியில் மலர்ந்தாயே...
என்வழியெங்கும் வழியும் கண்ணீர்
துளியில் தெரிந்தாயே...

கனவில் நுழைந்தாயே....
என்நெஞ்சின் கருவில் விளைந்தாயே
உன்னை தினந்தோரும் எண்ணும் பூவை
தீயில் எறிந்தாயே....

•    அனுபல்லவி

நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்...
நினைவுகள் கங்கை நதிபோன்றே பாயும்....
நீயில்லா வாழ்க்கை
தீமேலே யாக்கை

•    சரணம் - 01

அழகான இளங்காலை தூறும்
மழையாக வந்தேனே...
அணுவெங்கும் தீமூட்டி என்னை
அடியோடு எரித்தாயே...

நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே..
நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

வாழ்வெல்லாம் உனக்காக இருப்பேனடா...
ஒருவார்த்தை நீசொன்னால் இறப்பேனடா...

இரவோடு உறவாடி
நினைவுகள் நிதமின்று
துயரத்தில் துடிக்கிறதே....

•    சரணம் - 02

கலையாடும் அழகான வண்ண
சிலையாக நின்றேனே...
அலையாடும் கடல்போல வந்து
விளையாடிப் போனாயே....

நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

உன்வாசம் எனைவிட்டு அழியாதடா
என்நாடி நரம்பெங்கும் நீதானடா....

அலையோடு விளையாடி
இலையொன்று கிளையின்றி
தனிமையில் தவிக்கிறதே...

,ir: Rju;rd;  
ghlfp: gpurhe;jpdp  
ghlyhrpupau:; ftpQu; m];kpd;


    ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2011

    சக்தி TV யின் ''இசை இளவரசர்கள்''




    காதல் என்றாயே 
    கண்ணாலே கடத்திச் சென்றாயே...

    2008ம் ஆண்டு நடத்தப்பட்ட சக்தி TV யின்  இசை இளவரசர்கள் நிகழ்ச்சியில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை பெற்றுக்கொண்ட C.சுதர்ஷனின் இசையில் என்னால் (2011.8.07) எழுதப்பட்ட பாடல் இது.
     இசையை உள்வாங்கி, சூழலை உணர்ந்து இந்த பாடலை எழுதுவதற்கு எனக்கு 4 மணிநேரம் தேவைப்பட்டது. 
    பாடலை மிகவிரைவில் வானலை வழியாகவும் இணையத்தளங்கள் வாயிலாகவும் எல்லோரும் கேட்டு மகிழலாம்.


    இசை:  'இசை இளவரசர்கள்' புகழ்  C.சுதர்ஷன் 
    பாடல் வரிகள்: 'இசை இளவரசர்கள்' புகழ் கவிஞர் அஸ்மின்


    பல்லவி

    காதல் என்றாயே...
    கண்ணாலே கடத்திச் சென்றாயே
    நடுக் கடல்மீது கண்ணைக் கட்டி
    கவிழ்த்து சென்றாயே...

    உயிரே என்றாயே...
    என்நெஞ்சின் உள்ளே சென்றாயே...
    உன்பெயர் சொல்லி துடிக்கும்  நெஞ்சை
    அடித்துக்கொன்றாயே...


    அனுபல்லவி

    நீ என்னை பிரிந்து மறந்த பின்னாலும்
    நிலவே என்காதல் தேயாது வாழும்
    மறந்தாயே தேனே
    இறந்தேனே நானே..

    சரணம்-01.

    அழகான இளங்காலை தூறும்
    மழையாக வந்தாயே...
    அனலான புனலாகி இன்று
    என்நெஞ்சை எரித்தாயே...!

    நீ தந்த பூகம்பம் என்னோடு போகட்டும்
    நீ போகும் திசையெல்லாம் பூஞ்சோலையாகட்டும்..

    உன்கண்கள் சிவந்தால்நான் அழுவேனடி
    உனக்காக கையேந்தி தொழுவேனடி

    நிலவோடு... உறவாடி
    நினைவுகள் நிதமின்று கவிதையில்
    கரைகிறதே....


    சரணம் - 02

    உனக்காக எனக்குள்ளே ஒரு
    தொடுவானம் செய்தேனே..
    எதற்காக நிலவேநீ விட்டு
    தொலை தூரம் போனாயே...

    நீ தந்த பூச்செண்டை வாடாமல் பார்ப்பேனே
    நீருக்கு பதிலாக கண்ணீரை வார்ப்பேனே..

    நீ தூங்க நாளும்நான் விழிப்பேனடி...
    நீ கேட்டால் உயிரைநான் அளிப்பேனடி...

    அலையோடு விளையாடி
    இலையொன்று கிளையின்றி
    தனிமையில் தவிக்கிறதே...


    திங்கள், 1 ஆகஸ்ட், 2011

    நான் பாடினேன் தேவதை நீகேட்கவே….


     பல்லவி

    நான் பாடினேன்  தேவதை நீ கேட்கவே
    நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

    அனுபல்லவி

    என்தேசம்  நீதானே
    என்சுவாசம்   நீதானே
    என்பாடல் நீயடி
    பொய் ஊடல் ஏனடி..?

    சரணம் 01.

    உன் மௌனம் என் நெஞ்சை 
    கால்பந்து விளையாடும்
    நீ சிரிக்கும் போதெல்லாம் 
    நெஞ்சுக்குள்ளே  குயில் பாடும்

    கவி பாடும் உன் கண்கள் 
    என் பொழுதைக்  களவாடும்
    காத்திருக்கும் போதல்லாம் 
    உயிரின் உள்ளே வலி கூடும்

    உன்னை எண்ணி வாடும்
    என்னோடு எந்நாளும் பண்பாடு
    கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

    ஊடல் கொண்ட உயிரே
    உன்னோடு எப்போதும் அன்போடு
    வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

    கோபம் என்னவோ
    கொஞ்சிப்பேசவா


    சரணம் -02

    கண்டங்கள் பல தாண்டி
    கால் போக நேர்ந்தாலும்
    நெஞ்சில் பூத்த காதல் பூ
    கடவுள் போல உயிர் வாழும்

    ஊரென்ன சொன்னாலும்
    யாரென்ன செய்தாலும்
    உந்தன் பெயரை வேதம் போலே
    உள்ளம் எண்ணும் எந்நாளும்

    நீலவானம் வந்து
    நிலவோடு நீராடும் பின்னேரம்..
    நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

    அந்திமாலை நேரம்
    கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
    அன்புமாலை சூடி உறவாவோம்...

    வாட்டம் என்ன பூவே
    வாழ்ந்து பார்க்கவா..!!




    இசை : 'இசை இளவரசர்கள்' எஸ்.நளிந்தா
     
    பாடியவர்: 'இசை இளவரசர்கள்' புகழ் சுதர்ஷன்
     
    பாடலாசிரியர்:கவிஞர் அஸ்மின்  

    2011.8.01

    ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

    அண்ணாச்சி கோட்டையிலே அவன வெல்ல யாருமில்ல...(புதிய பாடல்)



    பாடலாசிரியர்: கவிஞர் அஸ்மின்


    பல்லவி

    ண்ணாச்சி கோட்டையிலே
    அவன வெல்ல யாருமில்ல
    கருவாச்சி பெத்தபுள்ள
    கத்தி வச்சா கழுத்து இல்ல!

    சிங்கம்போல நடந்து வாரன் பாரு-மாமன்
    சிரிப்புக்கேட்டா அடங்குமடா ஊரு....
    அங்கமெல்லாம் வழியுது பார் பீரு...
    எங்கும் இவன் ராச்சியம்தான் கூறு....
    (அண்ணாச்சி கோட்டையிலே)

       சரணங்கள்

    பாலிருக்குது பழமிருக்குது
    பருகிடவா மச்சான்...
    பார்வையாலே தேகமெங்கும்
    தேனொழுக வச்சான்...

    ஆசபோல மாம்பழத்த
    அறுத்துத் தின்னடா-நான்
    காசுபோட்டா விடிய விடிய
    கனியும் பெண்ணடா

    கொண்டுவாடா சோடா-என்ன
    கொல்ல வந்த வேடா-இது
    திண்டுக்கல்லு பீடா-வந்து
    திண்டுவிட்டு போடா...                      
      
    (அண்ணாச்சி கோட்டையிலே)
    கள்ளிருக்கும் பானையிலே
    கையவச்சுப் போனாய்..
    உள்ளிருக்கும் பள்ளத்தில
    ஒழுகுதடா தேனாய்..

    வில்லெனவே மாறுகிறேன்
    அம்பெடுத்து வாடா
    புல்லுக்கட்டே கூப்பிடுறேன்
    மேஞ்சப்புட்டு போடா...

    அறுவா மீசக்காரா-என்ன
    ஆளவந்த சூரா
    பருவமுண்டு 'மோரா'-நீ
    பருகுவந்து ஜோரா....                       

      (அண்ணாச்சி கோட்டையிலே)


    2010.12.15

    மாநபியே துயரின் மாமருந்தே...(புதிய இஸ்லாமிய கீதம்)




    பாடலாசிரியர்: கவிஞர் பொத்துவில்  அஸ்மின்  
    பாடகி:ஷைபா பேகம்( இலண்டன்)
    பல்லவி

    மாநபியே.. மாநபியே...
    மாநபியே துயரின் மாமருந்தே..
    மறையளித்த உலகின் தேன்கரும்பே....
    (மாநபியே..)


    உயர்தீனின் பூரணமே...
    உண்மை ஒளிரும் தோரணமே
    இறைமறையை நாங்கள் பெற
    நபி நீங்கள் காரணமே...!
    மக்கள் அறியாமை விட்டுத் தெளிவாக
    வழிகாட்டிய ஒளிதானே...

    (மாநபியே..)


    சரணம்-1

    மக்கா நகர் காபிர்கள்
    சிக்கல்பல செய்தாலும்
    பக்குவமாய் நீர் இருந்து
    பாவிகளை பொறுத்தீரே..
    தக்கபடி நாம் வாழ
    அக்கறையாய் இருந்தீரே
    திக்கு எட்டும் தீனை நட்டு
    தீமைகளை அறுத்தீரே...

    எதிர்காலம் நிகழ்காலம்
    கூறும் இறைவேதம்
    தந்த தூதரே நபிநாதரே...
    என்றும் உங்கள் வழிநடப்போம்
     (மாநபியே..)                                                                     

    சரணம்-2

    எல்லாம் வல்ல இறையோனை
    எங்கும் உள்ள மறையோனை
    அல்லாஹ்வினை மட்டும் நாங்கள்
    அடிபணியச் சொன்னீரே...
    ஒன்றுமில்லா எளியோரை
    ஒதுக்கவேண்டாம் என்றீரே
    வறுமை வந்து வதைத்த போதும்
    பொறுமையுடன் நின்றீரே...

    மார்க்கம் இறை மார்க்கம்
    மீட்கும் கரை சேர்க்கும்
    நேர்வழி என்றும் செல்கிறோம்
    உங்கள் நிழலில் நாமிருப்போம்...