ஈழத்து வாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஈழத்து வாசம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

ஈழத்து வாசம்




ஈழத்தின் புதிய மெல்லிசைப் பாடல்-2011

இலங்கையில் 2008ம் ஆண்டு சக்தி TVயின் ''இசை இளவரசர்கள்'' என்ற பிரமாண்டமான இசை போட்டி நிகழ்ச்சியின் வாயிலாக அறிமுகமான இளம் இசையமைப்பாளர் நளின்,அதன் மூலம் அறிமுகமாகி இன்று 'பனைமரக்காடு','கருப்பு சாமி உத்தரவு' திரைப்படங்கள் மூலம் திரைப்பட பாடலாசிரியராக ஏற்றம் பெற்றுள்ள கவிஞர் அஸ்மின், இளம் பாடகர் சுதர்சன் ஆகியோரின் கூட்டணியில் இப்பாடல் உருவாகியுள்ளது.

நமது ஈழத்து வாசம் வீசும் இப்பாடலை வரவேற்று இந்த இளம் கலைஞர்களை பாராட்டுவீர்கள் என்று நம்புகின்றோம்.

2011.8.10

Music: S.Nalin - 0094 773749559
Lyrics: Kavinger Asmin - 0094 778998620
Voice: A.Sudarshan 0094 770885336
Sound Engineering: Michael Mohana Ruban







பல்லவி

நான் பாடினேன் தேவதை நீ கேட்கவே…
நம்வாசலில் அழகிய பூப்பூக்கவே…!

அனுபல்லவி

என்தேசம் நீதானே
என்சுவாசம் நீதானே
என்பாடல் நீயடி
பொய் ஊடல் ஏனடி..?

சரணம் 01.

உன் மௌனம் என் நெஞ்சை
கால்பந்து விளையாடும்
நீ சிரிக்கும் போதெல்லாம்
நெஞ்சுக்குள்ளே குயில் பாடும்

கவி பாடும் உன் கண்கள்
என் பொழுதைக் களவாடும்
காத்திருக்கும் போதல்லாம்
உயிரின் உள்ளே வலி கூடும்

உன்னை எண்ணி வாடும்
என்னோடு எந்நாளும் பண்பாடு
கண்கள் கொண்டு என்னைக் கவிபாடு

ஊடல் கொண்ட உயிரே
உன்னோடு எப்போதும் அன்போடு
வாழும் எந்தன் மார்பில் மாலை சூடு

கோபம் என்னவோ
கொஞ்சிப்பேசவா


சரணம் -02

கண்டங்கள் பல தாண்டி
கால் போக நேர்ந்தாலும்
நெஞ்சில் பூத்த காதல் பூ
கடவுள் போல உயிர் வாழும்

ஊரென்ன சொன்னாலும்
யாரென்ன செய்தாலும்
உந்தன் பெயரை வேதம் போலே
உள்ளம் எண்ணும் எந்நாளும்

நீலவானம் வந்து
நிலவோடு நீராடும் பின்னேரம்..
நீயும் நானும் இன்றே ஒன்றாவோம்..

அந்திமாலை நேரம்
கவியூறும் நெஞ்சுக்குள் ரீங்காரம்
அன்புமாலை சூடி உறவாவோம்...

வாட்டம் என்ன பூவே
வாழ்ந்து பார்க்கவா..!!