சனி, 29 ஜனவரி, 2011

நெருப்பாய் எரியும் வாழ்வு!


ல்வியை விற்கிறான் கடையிலே!-இங்கு
கற்பவன் நிற்கிறான் படையிலே!
கழுதைகள் காவலன் உடையிலே!-மனம்
கண்டு துடிக்குதே இடையிலே…!

பேயர சாளுது நாட்டிலே!-இன்று
பேனையை போடுறார் கூட்டிலே!
கணவனும் மனைவியும் கோட்டிலே!கொண்ட
காதலால் வந்தது றோட்டிலே…!

நினைவுகள் காதலின் மடியிலே!-நிதம்
நிம்மதி தேடுறார் குடியிலே!
வாழ்வு நிலைப்பது படியிலே!-இன்றேல்
வாடிட வேண்டுநாம் அடியிலே!

அனைத்தையும் இழந்தார் அலையிலே!-இன்று
அகதியாய் நனைகிறார் மழையிலே!
வாழ்க்கை செலவுயர் மலையிலே!-இட்ட
வாக்கினால் வந்தெதம் தலையிலே!

சும்மா புகழுவார் பேச்சிலே!-கொடும்
சுயநல முள்ளது மூச்சிலே!
வாழ்க்கை எரியுது நெருப்பிலே!-உலகில்
வாழ்வது அவரவர் பொறுப்பிலே!!

2007.11.04

          நன்றி.
*பதிவுகள்
*வார்ப்பு
*சுடர்ஒளி


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக