வெள்ளி, 1 ஏப்ரல், 2011

படைப்பாளி அறிமுகம் -08- ''இருக்கிறம்'' சஞ்ஜீத்


லங்கையின் இளைய தலைமுறை இதழியலாளர்களுள் குறிப்பிடத்தக்க ஒருவரான அருளானந்தம் சஞ்ஜீத் யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.இவர்புகைப்படக்கலை,கேலிச்சித்திரம்,குறுந்திரைப்படம்,ஊடகத்துறை போன்றவற்றில் தனது ஆற்றலை நிரூபித்து வருகின்றார்.  

ரம்பக் கல்வியை யாழ் மத்திய கல்லூரியிலும் பின் உயர்தரம் வரை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியிலும் கற்ற இவர் யாழ்.பல்கலைக்கழகத்தில் நுண்கலைமாணி பட்டத்தை நிறைவு செய்துவிட்டு தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும் 'இருக்கிறம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் கடமை புரிந்து வருகின்றார்.

2000ம் ஆண்டு மட்டக்களப்பிலிருந்து வெளிவந்த 'தினக்கதிர்' பத்திரிகையில் நிருபராகவும், கார்ட்டூனிஸ்டாகவும் பத்திரிகைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்த இவர், அதன் பின்னர் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதே பல உள்ளுர் ஊடகங்களுக்கும் சர்வதேச இணையத்தள ஊடகங்களுக்கும் பிரதேச செய்தியாளராகவும் கார்ட்டூனிஸ்டாகவும் பணிபுரிந்திருக்கின்றார்.



2003ம் ஆண்டளவில் யாழில் இருந்து வெளிவந்த பத்திரிகைகளில் இவர் செய்தி நிருபராக பல சமகால கட்டுரைகளை எழுதியுள்ளதுடன், மக்கள் மீதான அடக்குமுறைகளையும் அவர்களுடைய வேதனைகளையும் கார்ட்டூன்களால் சித்தரித்துள்ளார்.யாழில்  இருந்து  வெளிவந்த பத்திரிகைகளிலும், வெளிநாட்டு ஊடகங்களிலும் இவரது கேலிச்சித்திரங்கள் வெளிவந்திருக்கின்றன. 



மூகப் பிரச்சினைகளை தனது படைப்புக்களுடாக வெளிப்படுத்திவரும் இவர் சிறந்த புகைப்படக் கலைஞருமாவார்.
2007 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப்பீடத்தில் 'வர்ணமொழி' என்ற கண்காட்சியில் 'த கிளிக்' என்ற புகைப்படக் காட்சியொன்றை நடத்தினார். 2008 ஆம் ஆண்டும் யாழ்ப்பாணத்தில் 'விழிகளின் வழியே' என்ற என்ற புகைப்படக் கண்காட்சியொன்றையும் யாழ் பெரியபுலம் மாகாவித்தியாலயத்தில் யாழ் றோட்டரிக்கழக அனுசரணையில் நடத்தி பலரதும் கவனத்தையும் நல்லறிஞர்களின் பாராட்டையும் பெற்றார். 



மிழ்பேசும் மக்களின் தேசிய சஞ்சிகையாக 'இருக்கிறம்' சஞ்சிகையை பல சவால்களுக்கும் மத்தியில் வெற்றிகரமாக வெளியிட்டு சமூகத்து எதிரான அநீதிகளை தட்டிக்கேட்கும் துணிச்சல்மிக்க பத்திரிகையாக 2009 முதல் மாற்றியமைத்த இவரின் பணியை கௌரவப்படுத்தும் முகமாக 2010 ஆண்டு கொழும்பு தமிழ்ச்சங்கம் நடத்திய முத்தமிழ் விழாவில் 
''சிறந்த சஞ்சிகை ஆசிரியருக்கான விருது'' இவருக்குக் கிடைத்தது.



பல்கலைக்கழகத்தில் கற்கும் காலத்தில் இவரின் நெறியாள்கையில் உருவான 'வதை' 'நெருப்பு' என்ற இரண்டு குறுந்திரைப்படங்கள் வெளிவந்துள்ளன. கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக பத்திரிகைத்துறையில் பணியாற்றிவரும் இவர் இதுவரை தான் பத்திரிகைகளில் வரைந்த கேலிச்சித்திரங்களை தொகுத்து நூலாகவும் வெளியிட இருக்கின்றார்.

தனது காத்திரமான எழுத்து நடைமூலம் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலமும் இலங்கையின் ஊடகத்துறையில் முத்திரை பதித்துவரும் இளம் ஊடகவியலாளர் அருள்-சஞ்ஜீத் அவர்களின் படைப்புலக பணியில் மேலும் பல சுவடுகளைப் பதிக்க நாமும் வாழ்த்துவோம்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

கருத்துரையிடுக