சனி, 31 ஜூலை, 2010

சருகல்ல இவனென்று சாற்று.

'தேமாங்காய்'' ''புளிமாங்காய்'' ஒரு மண்ணும் விளங்காமல்
தெம்மாங்காய் பாடுகிறேன் பாட்டு-ஆமையா!
நான்பாடும் பாட்டை நானறியேன் பெருங்கவியே
கூனுண்டோ ஆயந்துநீர் கூறும்.

கிறுக்கும் கவியெல்லாம் கீழென்று வளர்கவியை
நறுக்கி பின்னவரே நாறுகின்றார்-திருக்கவியே
நொறுக்கி என்நெஞ்சில் நோக்காடு தந்தோர்முன்
சருகல்ல இவனென்று சாற்று.

அழகுத்தமிழ் கவியின் ஆற்றலினை உணராதோர்'
மிளகாய் போல்மரபை நினைக்கின்றார்'-விலகாமல்
 பழகும் தமிழ்மொழியில் மரபுத்தாய் மாண்புகளை
உலகுக்கு சொல்வீர் உணர்ந்து.

நன்றி.
*பதிவுகள்

*காற்றுவெளி- செப்டம்பர் -2010
*சம்மாந்துறையில் நடைபெற்ற தென்கிழக்கு தமிழ்சங்கத்தின் 'அடையாளம்' கவிதை நூல் வெளியிட்டு விழாவில் பாடப்பட்டது.-2010.12.23
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக