ஞாயிறு, 30 ஜனவரி, 2011

கண்ணோடு கலந்திட்ட காதல் பூ!


ண்ணோடு கலந்திட்ட காதல் பூவே-என்னை
          கனிவோடு நீபார்த்து கவிதைபேசு!
என்னோடு நீவந்தால் என்றன் நெஞ்சே-என்றும்
         உன்னோடு வாழ்வேன்நான் காசுதூசு..!

படிப்போடு தானுள்ளேன் பவளத்தேரே-உயிர்
         துடிப்போடு தானுள்ளேன் துவண்டு போகேன்-உள
வெடிப்போடு இன்றுன்னால் வெந்து போனேன்-நீ
          வெறுப்போடு பார்க்கின்றாய் நொந்துபோனேன்..!

வளமோடு வாழ்கின்ற வண்ணப்பூவே-வண்டு
        வடிவோடு வந்தாலா இதயம் தேடும்..?
நலமோடு வாழ்கின்ற நங்கையுன்னை-வெள்ளை
        நரையோடு வாழ்ந்தாலும் இதயம்பாடும்

ஓடாத நதியென்னை ஓடவைத்தாய்-எவரும்
         பாடாத பாடல்கள் பாடவைத்தாய்-பெண்ணை
நாடாத என்நெஞ்சை நாடவைத்தாய்-இந்த
         நரகத்தில் பின்னேயேன் வாடவைத்தாய்

கூடாத கூட்டத்தில் கூடினேனா-எவரும்
           பாடாத பாடல்கள் பாடினேனா
தேடாத வழியில்யான் தேடினேனா-ஏன்
          வாடாத என்னைநீ வாட்டுகின்றாய்.?

விதியோடு விளையாடி பட்டுப்போனேன்-உன்
        விழியோடு விளையாடி கெட்டுப்போனேன்
சதியோடு விளையாடி சரிந்துபோனேன்-அடி
         'சல்வாரே' உன்னாலோ எரிந்துபோனேன்.!!




                                  நன்றி.
*தினகரன் வாரமஞ்சரி -2011.01.30
*கவிதைப்பூங்கா(கவிஞர் ரஷீத் எம். ரியாழ்)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக