ஞாயிறு, 30 ஜனவரி, 2011

மாய்கின்ற மாநிலத்தின் மாடு...



குண்டுமழை பொழிகிறது
            கண்டு மனம் கிழிகிறது
துண்டுதுண்டாய் போனதெங்கள் தேசம்-யுத்தத்
              தூக்கினிலே தொங்குதெங்கள் நேசம்

துப்பாக்கி அழுகிறது
             'தோட்டாக்கள்' சிரிக்கிறது
தப்பாட்டமாடுகிறீர் ஏனோ..?-உங்கள்
              தலையெங்கும் களிமண்ணே தானோ..?

வேதனைதான் அளித்தீர்கள்
            வேறென்ன கிழித்தீர்கள்..?
சாதனைகள் செய்கின்றீர் நாளும்-பேய்கள்
            சரித்திரத்தில் உம்பெயரும் வாழும்!

ஆயுதத்தை தூக்குபவர்
            அடித்துஉயிர் போக்குபவர்
மாய்கின்ற மாநிலத்தின் மாடு-அவரை
            மானிடராய் மாற்றிவிடப் பாடு!!

நன்றி.
*சுடர்ஒளி

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக