ஞாயிறு, 30 ஜனவரி, 2011

அடிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் ...!


 டிநெஞ்சில் நின்றிருந்தாய் மானாய் -அடியே
அத்தனையும் நீமறந்து போனாய்...
வெடிநெஞ்சில் பட்டவன் போலானேன் -கொடும்
வெந்தழலில் நீறாகி போனேன்.........

சில்லென்ற தென்றல்வரும் காலை -நீ
சிரிப்புதிர்த்து பள்ளிசெல்லும் வேளை...
வள்ளென்று நாய்குரைக்கும் நேரம் -நான்
வாழ்ந்திருப்பேன் உன்னினைவின் ஓரம்...

வேலிக்கு மேலாலெட்டிப் பார்ப்பாய் -என்
வேதனையை புன்னகையால் தீர்ப்பாய்..
கேலிபலர் எனைச் செய்தபோதும்-அடி
கேள்கிளியே உன்நினைவே மோதும்.....

காண்பவரை மயங்கவைக்கும் அழகி...
காதல்கொண்டு என்னுடன்நீ பழகி
நீயின்றி நான்வாழேன் என்றாய்-பின்
தீயின்மேல் எனைவீசிக் கொன்றாய்......

கடற்கரையில் கைகோர்த்து நடந்தோம்
கால்நூற்றான்டை கால்நடையில் கடந்தோம் -எம்
உடல்கறையை காணாததும் உண்மை-அதை
உணர்த்தியதா கணவனுக்குன் பெண்மை..?

         நன்றி
*சுடர்ஒளி
*தினகரன் கவிதைப்பூங்கா (20.3.11)
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக