சனி, 24 மார்ச், 2012

கால்களே கவனிக்கவும்

நாயெல்லாம் துரத்தி
கால்களை கடித்தன
காலெல்லாம் இடரி
பூக்களை மிதித்தன

பூக்களின் உதிர்வை
புழுக்களும் ரசித்தன
புழுக்களின் மனதில்
அழுக்குகள் வசித்தன

கால்களும் உயிர்தான்
பூக்களும் உயிர்தான்
என்பதை இன்று
கடவுளே உணர்ந்தான்.

மனிதனோ இறந்தான்
மிருகமே இருந்தான்
அதனால்தான் இன்று
நடுநிலை மறந்தான்...

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக