சனி, 31 மார்ச், 2012

நான் நீ 'அது'...!



நான் உன்னை பார்த்தேன்
நீ என்னை பார்த்தாய்
நான் உன்னை ஈர்த்தேன்
நீ என்னை ஈர்த்தாய்

நான் உன்னை ரசித்தேன்
நீ என்னை ரசித்தாய்
நான் கொஞ்சம் சிரித்தேன்
நீ கொஞ்சம் சிரித்தாய்

நான் வந்து கதைத்தேன்
நீ வந்து கதைத்தாய்
நான் உன்னை புரிந்தேன்
நீ என்னை புரிந்தாய்

நான் அன்று நடந்தேன்
நீ அன்று நடந்தாய்
நான் அன்று பறந்தேன்
நீ அன்று பறந்தாய்

நான் அன்று கொடுத்தேன்
நீ அன்று கொடுத்தாய்
நான் அன்று எடுத்தேன்
நீ அன்று எடுத்தாய்

நான் அன்று காய்ந்தேன்
நீ அன்று காய்ந்தாய்
நான் அன்று நனைந்தேன்
நீ அன்று நனைந்தாய்

நான் அன்று தோற்றேன்
நீ அன்று தோற்றாய்
நான் அன்று வென்றேன்
நீ அன்று வென்றாய்

நான் அன்று அழுதேன்
நீ அன்று அழுதாய்
நான் அன்று மகிழ்ந்தேன்
நீ அன்று மகிழ்ந்தாய்


நான் உன்னை மணந்தேன்
நீ என்னை மணந்தாய்
நான் உன்னில் மணத்தேன்
நீ என்னில் மணத்தாய்

நான் உன்னை பாயாக்கினேன்
நீ என்னை சேயாக்கினாய்
நான் உன்னை தாயாக்கினேன்
நீ என்னை தந்தையாக்கினாய்

நான் அன்று இனித்தேன்
நீ அன்று இனித்தாய்
நான் அன்று கசந்தேன்
நீ அன்று கசந்தாய்

நான் அன்று மறைத்தேன்
நீ அன்று மறைத்தாய்
நான் அன்று  உறைத்தேன்
நீ அன்று உறைத்தாய்

நான் அன்று முறைத்தேன்
நீ அன்று முறைத்தாய்
நான் அன்று குரைத்தேன்
நீ அன்று குரைத்தாய்

நான் அன்று அடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று நடித்தேன்
நீ அன்று வெடித்தாய்

நான் அன்று மதித்தேன்
நீ அன்று மதித்தாய்
நான் அன்று வெறுத்தேன்
நீ அன்று வெறுத்தாய்

நான் அன்று வாழ்ந்தேன்
நீ அன்று வாழ்ந்தாய்
நான் அன்று வீழ்ந்தேன்
நீ அன்று வீழ்ந்தாய்

நான் அன்று பிரிந்தேன்
நீ அன்று பிரிந்தாய்
நான் அன்று தவித்தேன்
நீ அன்று தவித்தாய்

நான் அன்று எறிந்தேன்
நீ அன்று எறிந்தாய்
நான் அன்று எரிந்தேன்
நீ அன்று எரிந்தாய்

நான் அன்று துடித்தேன்
நீ அன்று துடித்தாய்
நான் அன்று உடைந்தேன்
நீ அன்று உடைந்தாய்

நான் உன்னை நினைத்தேன்
நீ என்னை நினைத்தாய்
நான் உன்னை மறந்தேன்
நீ என்னை மறந்தாய்

நான் உன்னை இழந்தேன்
நீ என்னை இழந்தாய்
நான் இன்று உணர்ந்தேன்
நீ என்று உணர்வாய்...?
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

tamilnathan சொன்னது…

nee anru koduththaay
nan inru padiththen
nee anru rasiththay
nan inru magizhnthen.maa.ulaganathan,
thiruneelakudi

கருத்துரையிடுக