வெள்ளி, 4 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-02- எழுத்தாளர் நீ.பி. அருளானந்தம்.



லங்கையின் சமகால படைப்பாளிகளுள் மிக முக்கியமானவராக கருதப்படுபவர் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்கள்.

யாழ்ப்பாணம் அச்சுவேலியை சேர்ந்த ஹென்றி தம்பித்துரை தம்பிமுத்து அவர்களுக்கும் சில்லாலையை சேர்ந்த  லூர்தம்மா அவர்களுக்கும் மகனாக வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் என்ற இடத்தில் 1947.11.12ம் திகதி பிறந்த இவர் இறம்பைக்குளம் அந்தோனியார் பாடசாலையில் ஆரம்பக்கல்வியையும் வவுனியா மகாவித்தியாலயத்தில் சாதாரண தரம்வரையும் கற்றவர்.

சிறுகதை,நாவல்,மட்டுமல்லாது இலக்கியத்தின் இதயமாக கருதப்படும் கவிதையிலும் தனது ஆற்றல்கள் மூலம் தடம்பதித்து வரும் எழுத்தாளர் நீ.பி.அருளானந்தம் அவர்களின் படைப்புக்கள் இலங்கையின்   தேசிய பத்திரிகைகள்,கலை-இலக்கிய சஞ்சிகைகளில் களம் கண்டுள்ளன.

01.மாற்றங்கள் மறுப்பதற்கில்லை
02.கபளீகரம்
03.ஆமைக்குணம்
04.கறுப்பு ஞாயிறு (அரசின் சாகி
த்திய விருது பெற்ற நூல்)
05.அகதி
06.ஒரு பெண்ணென்று  எழுது
07.வெளிச்சம்

ஆகிய 7 சிறுகதை நூல்களையும்
01.வாழ்க்கையின் நிறங்கள்
02.துயரம் சுமப்பவர்கள்
ஆகிய 2 நாவல்களையும்,

01.வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து
02.கடந்து போகுதல்

ஆகிய 2 கவிதை நூல்களையும் இதுவரை வெளியிட்டுள்ளார்.

அன்பு பாலம் இதழ் நடத்திய வல்லிக் கண்ணன்  சர்வதேச சிறுகதைப்போட்டியில் 'இரத்தம் கிளர்த்தும் முள்முடி'
சிறுகதைக்காக முதலாமிடம் பெற்று தென்னிந்தியாவின் பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் இருந்து விருதினை பெற்றுக்கொண்டவர்.

இவர் தனது  கறுப்பு ஞாயிறு சிறுகதைத் தொகுதிக்காக இலங்கை அரசின் இலக்கியத்துகான உயரிய விருதான சாகித்திய மண்டல விருதினை பெற்றுக்கொண்டுள்ளார்.
இவரது வாழ்க்கையின் நிறங்கள் நாவல் அரச சாகித்திய விருதினையும் வடமாகாண சாகித்திய விருதினையும் பெற்றுக்கொண்டுள்ளது.


கின்னஸ் சாதனைகளில் சாதனை புரிந்து உலகத்தில் இரண்டாம் நிலையில் உள்ள இலங்கையை சேர்ந்த  பிரபல கின்னஸ் சாதனையாளர் சுரேஸ்ஜோக்கிம் அவர்கள் இவரது புத்திரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 வடபகுதி மக்களின் வாழ்வியலை பக்கசார்பின்றி படம்பிடித்துக்காட்டும் இவரது படைப்பக்கள் இன்னுமின்னும் இலக்கிய உலகில் அழியாத சுவடுகளை பதிக்க நாமும் வாழ்த்துவோம்.

















































இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக