செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -மலேசியா 2011'


திர்வரும் மே மாதம் 20,21,22ம் திகதிகளில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற இருக்கும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் பேராளர்களாக கலந்துகொள்ள விரும்புபவர்களும் ஆய்வரங்கில் பங்கேற்று ஆய்வுக்கட்டுரை வாசிக்க விருப்பமுடையோரும் கவியரங்கில் கலந்துகொள்ள விரும்புவோரும், மாநாட்டு மலருக்கான கட்டுரை, கவிதை சமர்ப்பிக்க விரும்புவோரும் இலங்கை ஏற்பாட்டுக் குழுவுடன் உடனடியாக தபால் மூலம் தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்படுகின்றனர்.தபால் மூலம் தொடர்பு கொள்பவர்களுக்கே விபரங்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளது.கடித உறையின் இடது பக்கத்தில் 'உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு -மலேசியா 2011' எனக்குறிப்பிட்டு இம்மாதம் 26ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்களை கீழ்காணும் முகவரிக்கு அனுப்புமாறு  இலங்கை ஏற்பாட்டு குழு அறிவித்துள்ளது.

முகவரி:
செயலாளர் ,
இலங்கை ஏற்பாட்டுக் குழு,
உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு-மலேசியா 2011
இல.9 சவுண்டர்ஸ் கோர்ட் ,
கொழும்பு-02
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக