புதன், 2 பிப்ரவரி, 2011

எதிர்வீட்டு நாய்!.


ருறங்கும் நேரத்தில்
தொலைபேசினாய்-அன்று
யாருமற்ற என்மனதை
விலைபேசினாய்
காதலெனும் மீன்பிடிக்க
வலைவீசினாய்-என்னை
காதலித்து காதலித்து
கவிபூசினாய்-பின்னர்
எச்சிலையே போவென்று
எனைவீசினாய்
எச்சமிட்டு எச்சரித்து
எனக்கேசினாய் -உனக்கு
அப்பொழுது நான்தெரிந்தேன்
உலகழகனாய்
இப்பொழுது நானுனக்கு....
எதிர்வீட்டு நாய்!.

                                நன்றி.
*தித்திக்குதே-வசந்தம் தொலைக்காட்சி
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக