புதன், 21 செப்டம்பர், 2011

2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.






இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாமிடம் பெற்று  2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருதை பெற்றுக்கொடுத்த பாடல்.






2010ஆம் ஆண்டுக்கான 'சிறந்த பாடலாசிரியருக்கான' தேசிய விருது




இசையமைப்பு: டிரோன் பெர்ணாண்டோ  
பாடல்வரிகள்: கவிஞர் அஸ்மின்  
பாடியோர்:ஜனனி ஜெயரத்னராஜா& டிரோன் 

புறப்படு தோழா-வண்ண
பூக்களாய் உலகை மாற்றலாம்
நீ இன்று நினைத்தால்-அந்த
நிலவிலும் கொடியை ஏற்றலாம்

இளைஞனே உன்னைநீ ஆளடா...
இன்னும்நான் சொல்கிறேன் கேளடா...
கவிஞர்கள்  உழைப்பிலே கவிதைகள் அரங்கேறும்-எங்கள்
இளைஞர்கள்  உழைப்பிலே  உலகமே திசைமாறும்....

(புறப்படு தோழா)



உன்னைநீ உனக்குள்ளே தேடடா!- அந்த
விண்ணைநீ காலின்கீழ் போடடா!
உண்மைநீ என்றுமே கூறடா!-இந்த
உலகமே வியக்குமே பாரடா..!

சோதனை தொடர்ந்துவந்தால் சோர்ந்துதான் போவாயா...?
சாதனை நீபடைக்க  சக்தியுடன் எழுவாயா...?
எழுந்துவா இளமுல்லையே-அந்த
வானம்தான்  உன் எல்லையே.....

(புறப்படு தோழா...)

உணர்வுக்குள் நம்பிக்கை நாட்டடா...-நீ
உலகுக்கே யாரென காட்டடா...
நேசத்தை நெஞ்சுக்குள் மாட்டடா-உன்
தேசத்தை அன்பினால் மாற்றடா....

ஏழைகள் என்னும் சொல்லை எரிக்கலாம் வருவாயா..?
என்னுயிர் தோழா உந்தன் கரங்களை தருவாயா...?
தோல்விகள்  உனக்கில்லையே-இனி
வெற்றிதான் உன் பிள்ளையே...!

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

wow....so meaningful....very very nice.. youths should read....they can boost/enhance their energy by reading this poem...wonderful lines...

பெயரில்லா சொன்னது…

mika sirantha paadal.
Intha paadalukku Noble prize ai kodukka solli naan parinthurai seykiren.
vanthu enkitta recomondation letter vangittu ponga asmin.

எஸ்.மதி சொன்னது…

கவிஞர்கள் உழைப்பிலே கவிதைகள் அரங்கேறும்-
இளைஞர்கள் உழைப்பிலே உலகமே திசைமாறும்
ஆழமான கருத்துக்கள்
பயணங்கள் தொடரட்டும்
வாழ்த்துகள் கவிஞரே .....

கே.எஸ்.செண்பா சொன்னது…

வாழ்த்துகள் அஸ்மின்! தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்!

கருத்துரையிடுக