சனி, 29 அக்டோபர், 2011

கவிஞர் பொத்துவில் அஸ்மினுக்கு சிறந்த பாடலாசிரியர் விருது


தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் நடைபெறும் 'வியர்வையின் ஓவியம்' உழைக்கும் மக்கள் கலைவிழா அண்மையில் கொழும்பு பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் இவ்வருடத்தின் சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதினை வசந்தம் தொலைக்காட்சியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளரும் தொகுப்பாளருமான கவிஞர் பொத்துவில் அஸ்மின் பெற்றுக்கொண்டார்.

இயக்குனர் கேசவராஜ் இயக்கும் 'பனைமரக்காடு' திரைப்படத்தின் மூலம் திரைப்பட பாடலாசிரியராக அறிமுகமாகியுள்ள இவர்.
ஏலவே ஜனாதிபதி விருது-(2001),அகஸ்தியர் விருது(2011) சிறந்த பாடலாசிரியருக்கான விருது (2010) உட்பட 10க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை பெற்றுள்ளார்.இவரது 'ரத்தம் இல்லாத யுத்தம்' கவிதை நூல் மிக விரைவில் வெளிவர இருப்பது குறிப்பிடத்தக்கது.


நன்றி.


*ITN-சுயதீன தொலைக்காட்சி சேவை (28.10.11)
*வசந்தம் TV  (28.10.11)
* தமிழ் மிரர் (29.10.11)
*தமிழ் ஸ்டார் இணையத்தளம் (29.10.11)
*இலங்கை நெட் (29.10.11)
*வசந்தம் FM (30.10.11)
*நேசம் நெட்(30.10.11) 
*தேடிப்பார்(30.10.11)
*தினமலர் (30.10.11.இந்தியா) 
*தமிழ்ஆதர்ஸ்(31.10.11)
*திண்ணை(31.10.11)
*விடிகுரல்(31.10.11) 

*வணக்கம் நெட்(31.10.11) 
*தேடிப்பார்(30.10.11) 
*LankaMuslim.org (30.10.11)
*மெட்ரோ மிரர்(30.10.11)
*நவமணி(04.11.11)
*எங்கள் தேசம்(01.11.2011) 

*பொத்துவில் நெட்
*மூன்றாம் கோணம்
*fasmi media world


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

F.NIHAZA சொன்னது…

வாழ்த்துக்கள் சகோ....

கருத்துரையிடுக