வெள்ளி, 11 பிப்ரவரி, 2011

படைப்பாளி அறிமுகம்-04- கவிஞர் பொத்துவில் அஸ்மின்

 

லங்கையின் கிழக்கு மாகாணம், அம்பாறை மாவட்டம், பொத்துவில் 

தேர்தல் தொகுதியில்,பொத்துவில் பிரதேசத்தை பிறப்பிடமாகவும் கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட
கவிஞர் அஸ்மின் இலங்கையில் மரபுக் கவிதை எழுதிவரும் இளம் கவிஞர்களுள் முதன்மைக் கவிஞராகவும்,பாடலாசிரியராகவும்,தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும்,தொகுப்பாளராகவும் அறியப்பட்டு வருகின்றார்.

 
 
பொத்துவில் மத்திய கல்லூரியின் பழைய மாணவராகவும்,இலங்கை அஸ்ரப் கலை-இலக்கிய பேரவையின் தலைவராகவும் இருக்கும் இவர்,ஒரு தசாப்த காலத்துக்கும்  மேலாக ஈழத்து இலக்கியத்துக்கு தன் படைப்புக்கள் மூலம் பங்களிப்பு செய்து வருகின்றார்.
இவரது கவிதைகள்,சிறுகதைகள்,பத்தி எழுத்துக்கள்,நேர்காணல்கள்,பாடல்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள்,சஞ்சிகைகள் சர்வதேச தமிழ் சஞ்சிகைகளிலும்,இணைய சஞ்சிகைகளிலும்,இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் ஈழநிலா,பொத்துவில் அஸ்மின் உதுமாலெவ்வை,பொத்துவிலூர் அஸ்மின்,கவிஞர் பொத்துவில் அஸ்மின் எனும் பெயர்களில் களம் கண்டுள்ளன.இவர் http://kavinger-asmin.blogspot.comஎன்ற தனது வலைப்பூவிலும் எழுதிவருகின்றார்.

 

02.இவரது படைப்புக்களுக்கு களம் கொடுத்த வானொலி,தொலைக்காட்சிகள்.
அ.வானொலிகள்
 
•    இலங்கை வானொலி தென்றல்
•    இலங்கை வானொலி முஸ்லிம் சேவை
•    சக்தி FM
•    வசந்தம் FM
•    வெற்றி FM
•    பிறை FM

•    வெளிச்சம் FM
•    ஊவா சமூக வானொலி
•    ரீ.ஆர்.டி.வானொலி (பிரான்ஸ்)
•    கனடா தமிழ் வானொலி
•    ஐ.பி.சி(இலண்டன்)
•    ஜேர்மன் தமிழோசை
 

ஆ.தொலைக்காட்சிகள்.

•    சக்தி TV- (இசை இளவரசர்கள்,குட்மோர்னிங் ஸ்ரீலங்கா)
•    வசந்தம் TV-(தித்திக்குதே,தூவானம்)
•    டான் TV (மண்வாசனை,தாலாட்டு)
•    நேத்ரா TV-(பிரவாகம்)


 

03.இவரது படைப்புக்கள் இடம்பெற்றுள்ள நூல்கள்.

•    முகவரி தொலைந்த முகங்கள் - 2000 (கவிதை நூல்)
•    அடையாளம் - 2010 (கவிதை நூல் - தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ் சங்க வெளியீடு)
•    இலங்கை முஸ்லிம் எழுத்தாளர் விபரத்திரட்டு பாகம் மூன்று .- 2003
•    ஜீவநதி நேர்காணல்கள் - 2010(15 ஈழத்து எழுத்தாளர்களின் நேர்காணல்கள்)
•    வியர்வையின் ஓவியம் 2010 (தொகுப்பு)
•    பட்சிகளின் உரையாடல்-2011 (கவிதை நூல்)

 
'தேடல்' எனும் கலை, இலக்கிய சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் 'சுடர் ஒளி' வாரவெளியீட்டின் உதவி ஆசிரியராகவும் இருந்திருக்கும் இவர்
இதுவரை இரண்டு கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.

04.வெளியிட்ட நூல்கள்

v    விடைதேடும்வினாக்கள் - (2002)
v    விடியலின் ராகங்கள- (2003)

 

05.வெளிவர இருக்கும் நூல்கள்

Ø    ரத்தம் இல்லாத யுத்தம் (கவிதை)
Ø    ஈழநிலாவின் உணர்வுகள (சுடர் ஒளி வாரவெளியீட்டில் 50வாரமாக பிரசுரமான பத்தி எழுத்து)
Ø    நிலவு உறங்கும் டயறி (சிறுகதை)
Ø    கவிஞர் அஸ்மின் பாடல்கள். (மெல்லிசை பாடல்)



06.தேசிய ரீதியிலான கவிதைப்போட்டிகளில் பங்கேற்று பத்துத் தடவைகள் பரிசில்கள்,விருதுகள் வென்றுள்ளார்.


1.    மறைந்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு -(ஜனாதிபதி விருது)
இந்த விருது முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 2001.09.16 அன்று பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் வைத்து வழங்கப்பட்டது.

2.    பேராதனை பல்கலைக்கழகத்தின் தமிழ்சாஹித்தியவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2002

3.    பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்சங்கத்தின் பவளவிழாவை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் முதலாம் பரிசு (தங்கப்பதக்கம்)-2003

4.    அகில இலங்கை இந்து மாமன்றம் அகில இலங்கை மட்டத்தில் நடாத்திய சொல்லோவிய போட்டியில் சிறப்புப் பரிசு.2003

5.    விபவி கலாசார மையம் அகில இலங்கை மட்டத்தில் நடத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2003

6.    பிரான்ஸ் மகாகவி பாரதியார் மன்றம் சர்வதேச ரீதியாக நடாத்திய கவிதைப்போட்டியில் சிறப்புப் பரிசு.2007

7.    சக்தி TV யினால் அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட 'இசைஇளவரசர்கள்'போட்டி நிகழ்ச்சியில் பாடலாசிரியருக்கான அங்கீகாரம்.-2008

8.    இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  அகில  மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடலியற்றல் போட்டியில் முதலாம் பரிசு.-(சிறந்த பாடலாசிரியர் விருது)-2010

9.    இலங்கை தேசிய தொழிற்சங்க மத்திய நிலையத்தினால் 'வியர்வையின் ஓவியம்' கலை நிகழ்வை முன்னிட்டு  அகில  மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் போட்டியில் இரண்டாம் பரிசு.- 2010

10.    இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்சங்கம் மறைந்த இலங்கை முஸ்லிம்களின் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் முதலாவது ஞாபகார்த்த தினத்தை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் மூன்றாம் பரிசு.-2010

11.    'லங்கா' பத்திரிகை நிறுவனத்தின் புதிய சிறகுகள்-2011 கலை நிகழ்வை முன்னிட்டு அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட கவிதைப்போட்டியில் சிறப்புப்பரிசு-2011

 

இலங்கையிலிருந்து ஒளிபரப்பாகும் சர்வதேச தமிழ் தொலைக்காட்சியான டான் TVயின் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், டான்தமிழ் ஒலி வானொலியில் செய்திவாசிப்பாளராகவும் சிறிது காலம் பணிபுரிந்த இவர் தற்பொழுது இலங்கை வசந்தம் TVயில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணிபுரிந்து வருகின்றார்.

 
வசந்தம் TVயில் இவர் தயாரித்து தொகுத்து வழங்கிய கவிதையுடன் கூடிய இனிய இடைக்காலப்பாடல்களை சுமந்து வரும் 'தித்திக்குதே' நிகழ்ச்சி பலரது பாராட்டையும் கவனத்தையும் பெற்ற நிகழ்ச்சியாகும்.இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைத்து பாடிய இவரது 'எங்கோ பிறந்தவளே...' பாடல்
இலங்கையில் மட்டுமல்லாது புலம்பெயர் நாடுகளிலும் இவருக்கு நல்ல அடையாளத்தை பெற்றுக்கொடுத்துள்ளது.
 
தயாரிப்பாளர் செவ்வேள் தயாரிக்க இயக்குனர் கேசவராஜ் இயக்கும்  'பனைமரக்காடு' திரைப்படத்தில் இவர் பாடல் எழுதியிருக்கின்றார்.



இலங்கையின் சக்திTVயினால் நடாத்தப்பட்ட  'இசை இளவரசர்கள்' போட்டி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான போட்டியாளர்களுக்குள் தேர்வான 16 பாடலாசிரியர்களுள் இவரும் ஒருவர்.இதன் மூலம் தென்னிந்தயா சென்று தமிழகத்தின் மூத்த பாடலாசிரியர்களை சந்தித்து அவர்களின் ஆலோசனைகளை பெறும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.


 
தமிழ் புலமையும் தனித்துவமான கவிதை ஆற்றலும் கொண்ட கவிஞர் அஸ்மின் இலங்கையில் இருக்கும் கவிஞர்களில் மரபுக்கவிதையில் ஆளுமையுள்ள ஒரே ஒரு இளம் முஸ்லிம் கவிஞர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது முகவரி:
 
U.L.M.ASMIN 
 CENTRAL  ROAD,
POTTUVIL-07
vtvasmin@gmail.com




இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

4 கருத்துகள்:

நடேஷன் சொன்னது…

உங்கள் கவிதைகள் அனைத்தும் படித்தேன். நன்றாக இருக்கின்றது.வாழ்த்துக்கள்

தேவிகா முருகன் சொன்னது…

இலங்கையின் கவிப்பேரரசே... உங்களது எங்கோ பிறந்தவளே... பாடலை கேட்டேன்.மீண்டும் கேட்டேன்... இப்பொழுதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்....கவிதைகள் எல்லாம் நன்றாக இருக்கின்றது. உங்கள் கவிதை நூலை பெறுவதற்கு என்ன செய்யவேண்டும் சென்னையில் கிடைக்குமா?

தேவிகா முருகன்
சென்னை.

கவிஞர் அஸ்மின் சொன்னது…

நண்பர் நடேஷன் மற்றும் தோழி தேவிகா முருகன் அவர்களுக்கும் எனது இதயம் கனிந்த நன்றிகள்

titi சொன்னது…

super machchi

கருத்துரையிடுக