சனி, 14 மே, 2011

படைப்பாளி அறிமுகம் -13 கவிஞர் கிண்ணியா சபருள்ளா

இலங்கையின் இளைய தலைமுறை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் கிண்ணியா சபருள்ளா திருகோணமலை மாவட்டம், கிண்ணியா பிரதேசத்தில், அடப்பனார் வயல் எனும் இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.

கிண்ணியா மத்திய கல்லூரி,கொழும்பு பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் தனது சட்டமானி பட்டத்தை நிறைவுசெய்து அதிலே சிறப்பு தேர்ச்சி பெற்று சட்டபீடத்திலே சிறிது காலம் விரிவுரையாளராக கடமையாற்றினார்.அதன் பிற்பாடு இவர் கடந்த 7வருடங்களாக திருகோணமலை மாவட்ட நீதிமன்ற தொகுதியில் முன்னணி சட்டத்தரணியாக திகழ்வதோடு கிண்ணியா மாநகரசபையின் பிரதி மேயராகவும் கடமையாற்றி வருகின்றார்.

சட்டம், அரசியல்,சமூகம், மற்றும் இலக்கியம்,ஆன்மீகம் என பன்முகத்தளத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் கவிஞர் கிண்ணியா சபருள்ளா கவிதை, சிறுகதை, பாடுதல், பாடலியற்றல், பட்டிமன்றம், இசை,மேடைப்பேச்சு  என பல தளங்களில் தனது முத்திரையை பதித்துவருகின்றார்.
1989களில் எழுத்துலகுக்குள் நுழைந்த இவர்  இதுவரை 100க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கவிதைகளையும் அரசியல் கட்டுரைகளையும் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதியிருக்கின்றார்.
இவரது முதலாவது கவிதை நூல் 'வியர்த்தொழுகும் மாலைப்பொழுது' அண்மையில் வெளியிடப்பட்டு பலரதும் கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 தனது காத்திரமான கவிதைகள் மூலமும் தனித்துவமான படைப்புக்கள் மூலம்  இலங்கையின் இலக்கியத்துறையில் முத்திரை பதித்துவரும்  கவிஞர் கிண்ணியா சபருள்ளாவை  நாமும் வாழ்த்துவோம்.


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக