வெள்ளி, 1 ஜூலை, 2011

'அகஸ்தியர்' விருது - 2011

தடாகம்' கலை- இலக்கிய வட்டத்தின் அகஸ்தியர் விருது.
இடமிருந்து வலமாக:கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன்,'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வி, மருதூர் அன்சார், கே.எம்.ஏ.அப்துல் றஸாக் (கி.மா. உ), ஏ.எம். ஜெமீல்(கி.மா. உ) 'தமிழ் தென்றல்' அலி அக்பர்,கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி

லங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில்  சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை  கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால்  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம அதிதிகளாக  கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் கலந்துகொண்டனர்.இந்நிகழ்வில் 'அகஸ்தியர்'  விருதுதினையும், 'கலைத்தீபம்' பட்டத்தினையும் பெற்றுக்கொண்ட   கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன்,மருதூர் அன்சார், 'தமிழ் தென்றல்' அலி அக்பர், கவிஞர் நஜ்முல் ஹுஸைன்,கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோரை படத்தில் காணலாம்.
நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 10.7.11
கவிஞர் பொத்துவில் அஸ்மின்


நன்றி: 
  • வீரகேசரி வாரவெளியீடு (10.7.11)
  • விடிவெள்ளி  (07.7.11)
  • நேசம் நெட்
  • இலங்கை நெட்
  • திண்ணை
  • தமிழ் ஆதர்ஸ்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

துவாரகன் சொன்னது…

விருதினைப் பெற்ற மன்னார் அமுதன், அஸ்மின் ஆகிய நண்பர்களுக்கு வாழத்துக்கள்

கருத்துரையிடுக