சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 17 எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான  எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா திருகோணமலையை  பிறப்பிடமாக கொண்டவர்.

திருகோணமலை சென் ஜோசப் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சுயாதீன ஊடகவியலாளராக செயற்பட்டு வருவதோடு தனியார் நிறுவனமொன்றில் முகாமையாளராகவும் கடமையாற்றி வருகின்றார். இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை,சஞ்சிகைகளிலும் வானொலிகளிலும் இணைய இதழ்களிலும் இடம்பெற்றுள்ளன.

கவிதை,சிறுகதை, நாவல்,அரசியல், கட்டுரை, நாடகம், என்று இலக்கியத்தில் பல துறைகளிலும் தனது சுவடுகளை  பதித்துள்ள இவர்.
எழுத்தாளர் வ.அ.இராசரத்தினத்தை தனது மானசீக குருவாக நினைந்து அவர் வழியில் படைப்புக்களை படைத்து வருகின்றார்.


1979ம் ஆண்டிலிருந்து எழுத்துக்களோடு கைகுலுக்க ஆரம்பித்த இவரது பேனாவின் முதல் பிரசவம் 'சேகுவரா' என்ற குறுநாவல் ஆகும்.
அது இவர் மேலான விமர்சகர்களின் பார்வையை அகலப்படுத்தியது எனலாம். அதன் பிறகு
 1.    மரண பூமி
2.    அப்பா
3.    நாக்கியா
4.    ஜனாதிபதியே ஜனநாயகம்
5.    மலையக மக்களுக்கு அடையாள அட்டை
6.    கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்
7.    அஸ்ரப்  பெருக்கெடுத்த கதைகள்
8.    அஸ்ரபின் அந்த ஏழு நாட்கள்   என்று 9 நூல்களை வெளியிட்டிருக்கின்றார்.



'கிழக்கின் உதயம் தேசத்தின் இதயம்'  என்ற இவரது  நூல் மறைந்த தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஸ்ரபின் வாழ்க்கை சரிதத்தை பின்னணியாக கொண்டதாக வெளிவந்த முதலாவது நூலாகும்.இந்த நூல் இவருக்கு பரவலான அறிமுகத்தை அனைத்து சமூகத்தின் மத்தியிலும் ஏற்படுத்திக் கொடுத்தது எனலாம்.

இவர் மிகவிரைவில்

1.    போரும் மனிதனும்
2.    மக்களும் மற்றவர்களும்
3.    ஒரு மாமன்னரின் பொற்காலம்
4.    சின்ன சின்ன எண்ணங்கள்
5.    மரணம் ஒரு முடிவல்ல
6.    இந்தியாவை நேசிக்கும் வரை
7.    எனது தேசம் எனது மக்கள்

தனது 7 நூல்களை வெளியீடு செய்வதற்குரிய பணியில் ஈடுபட்டு வருகின்றார். இவரது எழுத்துலக பணி மேலும் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக