சனி, 22 அக்டோபர், 2011

படைப்பாளி அறிமுகம் - 19 கவிஞர் உ.நிஸார்

இலங்கை கவிஞர்களில் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் உ.நிஸார் அவர்கள் கண்டி மாவட்டம் உடுநுவரை முருதகஹமுல என்ற இடத்தை பிறப்பிடமாக கொண்டவர்.உடுநுவரை நிசார், உ. நிசார் ஆகிய புனைப்பெயர்களில் எழுதிவரும் இவர்,சிறுவர் இலக்கியம் படைப்பதில் அதிக  ஆர்வம் காட்டிவரும் எழுத்தாளராவார்.

உடுநுவரை டி. பி. விஜயதுங்க தேசிய பாடசாலை, கம்பளை சாஹிரா தேசிய பாடசாலைஆகிவற்றின் பழைய மாணவரான இவர் மாவனல்லை சாஹிரா பாடசாலையில் ஆசிரியராக கடமையாற்றி வருகின்றார்.இவர் சிங்கள மொழியில் கல்வி பயின்றாலும் தமிழ் மொழியை தன் முயற்சியால் கற்றுத்தேர்ந்து  மரபுக்கவிதை கவிதை படைக்கும் ஆற்றல்  பெற்றவராக திகழ்கிறார்.இவரது படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகைகள் சஞ்சிகைளில் களம் கண்டுள்ளன.


 இதுவரை  கனவுப்பூக்கள் என்ற கவிதை நூலை வெளியிட்டுள்ள இவர்
•    ஓயாத அலைகள்
•    நட்சத்திரப் பூக்கள்
•    வெந்நிலா
•    மலரும் மொட்டுக்கள்
•    சிறகு விரி
•    பாவிருந்து
•    இளைய நிலா
•    முத்துக் கணையாழி 
 உட்பட பல சிறுவர் இலக்கிய நூல்களையும்   இதுவரை  எழுதி வெளியிட்டுள்ளார்.தேசிய மட்டத்தில் நடாத்தப்பட் ட பல கலை இலக்கிய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கும் இவர்
2008ம் ஆண்டு அரச இலக்கிய விருதான 'கலாபூசணம் விருது' வழங்கப்பட்டு  கௌரவிக்கப்பட்டிருக்கின்றார்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக