சனி, 14 செப்டம்பர், 2013

கடன்காரன் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியீட்டு விழா



வன்னி கிரியேஷன் தயாரிப்பில் ப.சிவகாந்தன் இயக்கத்தில் வெளிவரும் ''கடன்காரன்'' திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரெயிலர் வெளியிட்டு விழா இன்று (15.9.13) பி.ப.2.30 மணியளவில்  வவுனியா  நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இத்திரைப்படத்துக்கு தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் கந்தப்பு ஜெயந்தன் இசையமைக்க, பாடல் வரிகளை விஜய் ஆண்டனியின் 'நான்' திரைப்பட புகழ் கவிஞர் பொத்துவில் அஸ்மின் மற்றும் பிரதாபன் மாஸ்டர் ஆகியோர் எழுதியுள்ளனர். பாடல்களை கானா பாலா, ஜெயரூபன், சுபா, ஜெயந்தன், ஜெயப்பிரதா ஆகியோர் பாடியுள்ளனர்.

இலங்கையின் தமிழ்த் திரைப்பட வரலாற்றில் வன்னி மண்ணில் பெரும் பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகிவரும் இத்திரைப்படம் இந்தியாவிலும், இலங்கையிலும், புலம்பெயர் நாடுகளிலும் ஒரே தினத்தினத்தில் வெளியிடப்படக்கூடிய நடவடிக்கைகளை வன்னி கிரியெஷன் மேற்கொண்டுள்ளுதாக அதன் இயக்குனர் ப.சிவகாந்தன் தெரிவித்துள்ளார்.












இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

tamilraja சொன்னது…

தமிழ்நாட்டில்,கேரளா,ஆந்திரா பகுதிகளில் வெளியிட உதவி செய்கிறேன்.ரசிராஜா

கருத்துரையிடுக