வியாழன், 10 பிப்ரவரி, 2011

'ஆமா'போடப்பா... அத்தனையும் கிடைக்குமப்பா...



கேள்வி கேட்பவர்க்கு
கேழ்வரகும் இல்லையப்பா...
'ஆமா'போடப்பா...
அத்தனையும் கிடைக்குமப்பா...

வாள்பிடிக்க எண்ணாதே...?
வாய்காட்டி நிற்காதே.....
வாலாட்ட கற்றுக்கொள்
வாழ்க்கை இருக்குதப்பா......

காகம் அழகென்று
கருத்துரைத்தால் அதிகாரி.....
புறாப்போன்று இருக்குதென்று
புன்னகைக்க பழகிக்கொள்......

பதவிபெற வேண்டுமென்றால்
பாய்விரிக்கக் கற்றுக்கொள்
முன்னணியில் திகழ்வதற்கு
முதலிரவுக் கொத்துக்கொள்....

'இன்டர்வியுவில்' சித்திபெற
'இங்கிலிசும்' உனக்கெதற்கு...?
காசுபணம் இருக்கிறதா...?....
கழுதைக்கும் இடமிருக்கு......

எதிர்த்துப் பேசாதே...
எதிர்காலம் மடிந்துவிடும்
எடுபிடியாய் மாறிக்கொள்
'எம்பி'யாய் மாறிடலாம்......

உண்மையாய் உழைக்காதே...
உன்தலைக்கு வேட்டுவரும்..
பொறுப்பாக நடிதம்பி
பொன்பரிசு வீடுவரும்.......

சமூகம் என்றோடாதே..
சாவுமணி அடிப்பார்கள்...
சுயநலத்தை கையில்கொள்
சுகத்தோடு வாழ்ந்திடுவாய்....


இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக