புதன், 2 பிப்ரவரி, 2011

நாக்கறுத்து கொடுத்துவிட்டு... நாய்வாலை ஆட்டி ..ஆட்டி...


நானிலம் செழிப்பதற்கு
               நல்வினைகள் புரிபவரை
               நாடிநிதம் தேடுவதா பட்டம்?
பாநிலத்தில் கவிதை நட்டு
               பாருலகை வென்று நிற்கும்
              பாவுழவர் சூடுவதா பட்டம்?

தேனமுதாய் கல்விதனை
              தேர்ந்து நிதம் கற்பவரை
              தேடிபுகழ் கூட்டுவதா பட்டம்?
வானமதில் இளசு எலாம்
              வண்ண வண்ண மாகவிட்டு
              வாழ்வின் நிலை காட்டுவதா பட்டம்?

தகுதியற்ற முண்டமெலாம்
              தலைவராகி ஊர்புகழ
              தன்பெயர்முன் போடுவதா பட்டம்?
பகுதி விகுதி தெரியாத
              படைப்புலக குப்பையெலாம்
              பல்லிளித்து வாங்குவதா பட்டம்?

காக்கை பிடிப்பவர்க்கு
             கற்பிக்கத் தகுதி பெற்றோர்
             கால்பிடித்து வாங்குவதா பட்டம்?
நாக்கறுத்து கொடுத்துவிட்டு
             நாய்வாலை ஆட்டியாட்டி
            நக்கரைத்து வாங்குவதா பட்டம்?

'உனக்கு நாளை சூட்டுகிறேன்
            எனக்கு இன்று சூட்டு' என்று
           திட்டமிட்டு திருடுவதா பட்டம்?
கணக்கற்ற பட்டம் வேண்ட
           கலங்காதே தோழா நீயும்
           காசிருந்தால் வாங்கிடலாம் பட்டம்..!!


                          நன்றி.
தினகரன் வாரம *ஞ்சரி
*சுடர் ஒளி
*இலங்கை வானாலி முஸ்லிம் சேவை
*பதிவுகள்
இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

2 கருத்துகள்:

shammi's blog சொன்னது…

இன்றைய நிதர்சனம் , கவிதை அருமை

கவிஞர் அஸ்மின் சொன்னது…

அன்புக்குரிய தோழி சமி முத்துவேல் அவர்களுக்கு மனம்கனிந்த நன்றி.

கருத்துரையிடுக