சனி, 17 செப்டம்பர், 2011

படைப்பாளி அறிமுகம் - 14 - கவிஞர் 'இளநெஞ்சன்' முர்ஷிதீன்


லங்கை படைப்பாளிகளுள் குறிப்பிடத்தக்க ஒருவரான கவிஞர் இளநெஞ்சன் முர்ஷிதீன் கொழும்பு மாளிகாவத்தையை பிறப்பிடமாககொண்டவர்.

1979ம்ஆண்டிலிருந்து  கவிதைகளோடு கைகுலுக்க ஆரம்பித்த இவர் இற்றைவரையும் ஒரு சமுதாய எழுத்தாளனாக தனது பயணித்து வருகின்றார்.

மாளிகாவத்தை தாருஸ்ஸலாம் மகாவித்தியாலயத்தில் ஆரம்ப கல்வியை சிங்களமொழியிலும்  அதன்பின்னர் தமிழ் மொழியிலும் கல்வி பயின்ற இவர் பேராதனை பல்கலைகழகத்தின் கலைப்பட்டதாரி.திறந்த பல்கலைக்கழகத்தில் பத்திரிகைத்துறையில் டிப்ளோமா பட்டமும் அவுஸ்திரேலியாவில் சர்வதேச விவாகரங்களுக்கான பட்டப்பின் படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.


தினபதி, சிந்தாமணி, பத்திரிகையின் உதவியாசிரியராக கடமையாற்றியுள்ள இவர் தொலைக்காட்சி மற்றும் இணையத்தளங்களிலும் செய்தியாசிரியராக கடமைபுரிந்துள்ளார்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச  இளைஞர்  இஸ்லாமிய தலைமைத்துவ பயிற்சி முகாமில் கலந்துகொண்டுள்ள இவர் , அமெரிக்கா, இங்கிலாந்து,ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, லிபியா போன்ற நாடுகளில் நடைபெற்ற  ஊடகவியல் மனித உரிமைகள் சமாதான செயற்பாடுகள் தொடர்பான மாநாடுகளில் கலந்துகொண்டுள்ளார்.

வகவம் கவிதா பாசறையில் பட்டை தீட்டப்பட்ட இவரது கவிதை, சிறுகதை, கட்டுரை, படைப்புக்கள் இலங்கையின் தேசிய பத்திரிகை, சஞ்சிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்கள் பலவற்றிலும் களம் கண்டுள்ளன. 

தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் தேசிய மட்டத்தில் நடத்திய கவிதை, சிறுகதை, அறிவிப்பாளர் போட்டிகளில் முதலாமிடங்களை பெற்று ஜனாதிபதி விருதினை பெற்றிருக்கின்றார்.

இவரது முதலாவது வெளியீடாகிய 'இஸ்லாமிய கீதங்கள'1986ம் ஆண்டு வெளிவந்தது. அதன் பின்னர 1988ம் ஆண்டு  'ஒருவாசகனின் வாசகங்கள'; கவிதை நூலையும் 1990ம் ஆண்டு 'சமுதாய அகதிகள்' சிறுகதை நூலையும்
1995 இல் 'சமாதான யாசகங்கள்' கவிதை நூலையும்  2000ம் ஆண்டு 'மிலேனியம் கனவுகள்' கவிதை நூலையும் இலக்கிய உலகுக்கு தந்துள்ளார்.


எழுத்துக்களால் மட்டும்  சமூக முன்னேற்றம் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் இன்று இவர் சமுதாய முன்னேற்ற செயற்பாடுகளில் தன்னானான பங்களிப்பு செய்து வருகின்றார்.

இதை நீங்கள் வது நபராக வாசிக்கிறீர்கள்

1 கருத்து:

nawzar சொன்னது…

வாழ்துக்கள். அண்மைக்காலமாக எந்த வெளியீடுகளையும் காணவில்லையே?

கருத்துரையிடுக